செவ்வாய், பிப்ரவரி 07, 2012

யுகம்

அசாதாரணமான விஷயங்களை நாம் நிச்சயமாக ஆராயவேண்டும். ஆனால், அசாதாரணமான விஷயங்கள் இருப்பதாகச் சொல்பவர்களுக்கு அசாதாரணமான ஆதாரங்களும் தேவை.

இந்து தத்துவயியலின் படி இவ்வுலகின் காலம் நான்கு யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.அவை

1. கலியுகம் 4,32,000 வருடங்கள்

2. துவாபர யுகம் 8,64,000 வருடங்கள்

3. திரேதா யுகம் 1,296,000 வருடங்கள்

4. சத்யுகம் 1,728,000 வருடங்கள்

மொத்தம் 4,320,000 வருடங்கள்

இந்த நான்கு யுகங்களும் சேர்த்து சதுர்யுகம் எனப்படுகிறது. அது போன்று 72 சதுர்யுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்திரம்.

14 மன்வந்திரம் ஒரு கல்பம் எனப்படுகிறது. இது பிரம்மாவின் ஒரு பகல் எனப்படுகிறது. அதாவது 72*14=1008 சதுர்யுகங்கள் =1008*4,320,000=4.35 பில்லியன் வருடங்கள்

இந்து தத்துவயிலின் படி தற்போது இந்த பூமியில் நடப்பது 14வது மன்வந்திரம் அதாவது பூமியின் வயது 4.35பில்லியன் வருடங்கள் எனகணக்கிடப்படுகிறது.

தற்போதய விஞ்ஞான அடிப்படையிலும் பூமியின் வயதை 4.6 பில்லியன் வருடங்களாகவும் அதன் கால இடைவெளியும்  4 Eon களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது

HADEAN              4.6 to 3.9 billion years ago,

ARCHEO-ZOIC    3.9 to 2.5 billion years ago ,

PROTERO-ZOIC  2.5 billion years ago to 540 mya

PHANEROZOIC    540 mya through today

இதில்  உயிரினம் தோன்றி தற்போதய காலம் வரை ஏறக்குறைய 860 மில்லியன் வருடங்கள் கணக்கிடப்பட்டுளன.அவை

4 ERA என்பதாக பிரிக்கப்பட்டு அதுவும் பல PERIOD என பிரித்து அறியப்பட்டுள்ளது.


    1,800,000 quartenary 
      cenozoic 22,200,000  neogene 70,000,000
    46,000,000 paleogene 
       
    75,000,000 Cretaceous 
      mesozoic 49,000,000  jurassic 172,000,000
    48,000,000 triassic 
       
    46,000,000 permian 
    56,000,000 carbonaceous
    42,000,000 devonian 258,000,000
      paleozoic 25,000,000  silurian 
    43,000,000  ordivician 
    46,000,000    cambrian 
       
        Neo proterozoic 
    360,000,000  360,000,000
       
    860,000,000
   

இந்த 4 era கால நிலைகளின் அளவுகள் முறையே
cenozoic 70,000,000 வருடங்கள்
mesozoic 172,000,000 வருடங்கள்
paleozoic 258,000,000 வருடங்கள்
Neo proterozoic 360,000,000 வருடங்கள்

ஆக மொத்தம் 860,000,000 வருடங்கள் ஆகிறது.

இப்போது  இந்து  தத்துவயியலின் படி 860 மில்லியன்  வருடங்களுக்கு  வரும் மன்வந்திரத்தினை   கணக்கிட்டால்

4.35 பில்லியன் வருடங்கள்= 14 மன்வந்திரம்

.86 பில்லியன் வருடங்கள் = 14/4.35*.86=2.76 மன்வந்திரங்கள் ஆகிறது.

இதன் அடிப்படையில் இந்து யுகங்களை கணக்கிட்டால்

கலியுகம் 4,32,000 *2.76*72=85,847,040 வருடங்கள்

துவாபர யுகம் 8,64,000 *2.76*72=171,694,080 வருடங்கள்

திரேதா யுகம் 1,296,000 *2.76*72=257,541,120 வருடங்கள்

சத்யுகம் 1,728,000 *2.76*72=343,388,160 வருடங்கள்

விஞ்ஞான முறைப்படி அறியப்பட்டதுடன் மிகச் சரியாக பொருந்துகிறது

நன்றி : திரு.  ரமேஷ் அப்பாதுரை

வெள்ளி, ஜனவரி 06, 2012

மருத்துவர்கள் போராட்டம் நியாயமானதா....

 மக்களே போராடும் முன் எதற்காக போராடுகிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் கொலை செயப்பட்ட டாக்டர் அறுவை சிகிச்சை செய்பவர் அல்ல மேலும் அவர் ஒரு அனச்ச்தீசிய மருத்துவர் ஆவார் (டெக்கான் குரோனிகல் - 05-01-12).

  அவர் எப்படி அறுவை சிகிச்சை செய்யலாம் என்னதான் அவர் மருத்துவ துறையை சார்ந்தவராக இருந்தாலும் அவர் அந்த துறையில் நிபுணத்துவம் இல்லாமல் ஒரு சிகிச்சையில் அவரர்  ஈடுபடும் போது அவரு போலி மருத்துவருக்கு சமமானவரே.

அவ்வாறு நம் எடுத்துக்கொண்டால் இபொழுது நாடே போரடிகொண்டிருக்கும் போராட்டம் ஒரு போலி மருத்துவருக்காகவா....
ஒரு உயிர் பலி என்பது ஏற்க முடியாதுதான் ஆனால் அதற்காக அந்த மருத்துவரால் இறந்த உயிர் என்பது உயிரில்லையா....

எனவே என்னுடைய மேலான கருத்தெல்லாம் போராட்டம் வேண்டாம்   என்பதே... இறந்த மருத்துவரை மட்டும் அல்ல இறந்த அந்த கர்ப்பிணியையும் சகோதரியாக பாருங்கள் ப்ளீஸ்....

திங்கள், டிசம்பர் 26, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 7

Prana Mudra (பிரான முத்திரை):

செய்முறை:

மோதிர விரலயும்  சுண்டு  விரலையும்  சேர்த்து    பெரு விரல்  நுனியை   படத்தில்  காண்பித்திருப்பது  போல்  தொட வேண்டும், மற்ற இரண்டு விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடல் வலிமையுரும். நோய் எதிர்ப்பு சக்தி வளரும். கண் பார்வை  குறைபாடு  நீங்கும் வைட்டமின்  குறைபாடு  நீங்கும்.   உடல் தளர்ச்சி சோர்வு நீங்கும்.
கால அளவு:

தினமும்  இயன்ற அளவு செய்து வரலாம்..

வியாழன், டிசம்பர் 15, 2011

துர்வாசரா நீங்கள்?

   இப்போ இருக்கும் பரபரப்பான உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் stress எனப்படும் மனஅழுத்தம் அதிகமாகி கொண்டே வருவதை காணமுடிகிறது.  அதனால் வரும் பின்விளைவுகள் பல, அதில் முக்கியமானது, கோபம்.  நண்டு சிண்டு எல்லாம் மூக்கின் மேல் கோபத்துடன் அலைவதை காணமுடிகிறது.  பொறுமை இன்மையும், இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.  சரி இப்போ என்ன சொல்லவர்ர அப்படின்னு கேட்குறீங்களா?  ஒன்னும் இல்லேங்க, ஒரு ஈமெயில்ல வந்தது எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்னு தோனுச்சு அதான்.

ஒரு நாள் ஒரு துறவி தன்னோட சிஷ்யபிள்ளையை பார்த்து நம்ம ஏன் கோபம் வந்த கத்துரோம்னு தெரியும்னு கேட்டாரு. உடனே அவரோட தொண்டரடிபொடிகள் எல்லாம், நாம நம்ம அமைதியா இழந்திடரோம் அதனால தான் அப்படிணங்க.  அதை கேட்ட அந்த துறவி, சரி அப்படியே வச்சுகிட்டாலும், நம்ம பக்கத்துல இருகிறவன பார்த்து கத வேண்டிய அவசியம் என்ன இருக்கு? நம்ம மெதுவா பேசினாலே கேட்க போகுது இதுக்கு அனாவசியமா ஏன் கத்தனும்னு கேட்டாரு?  கேட்டது குருவாச்சே பதில் சொல்லாம இருக்க முடியுமா? நம்ம சிஷ்யர்களும் எத்தனையோ பதிகளா சொன்னங்க அதையெல்ல மறுத்துட்டாரு   நம்ம  குரு. சரி அப்போ நீங்களே சொல்லிருங்கன்னு சொன்னங்க நம்ம சிஷ்ய புள்ளைங்க.

இப்போ நம்ம துறவி சொன்னாரு, ஒரு மனுஷன் கோபப்படும்போது, அவன் யார் மேல கோபமா இருக்கானோ அவனோட மனச தள்ளிவச்சு பாக்குறான், அதனால, சத்தமா பேசினா தான் அந்த மனுசுக்கு கேக்கும்னு அவனோட மனசும் மூளையும் அவனுக்கு சொல்லுது, அதனால சத்தமா கத்துறான்.  சரி இதே அவன் இன்னொரு ஜீவன் மேல ரொம்ப பிரியமா இருந்த எப்படி பேசுறான், ரொம்ப மெதுவா பேசுறான். ஏன் அந்த மனசு அவன் மனசுக்கு ரொம்ப பக்கமா தெரியறது தான் காரணம்.  இதே ரொம்ப ரொம்ப பிரியமா இருந்தா, ஒரு கண்ணசைவு கூட போதும் வார்த்தையே தேவை இல்லை அப்படின்னு சொன்னாரு.

இதுல இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா, நம்ம பிடிச்சவங்கள, நம்ம வாழ்கைல ஒரு அங்கமா இருகரவங்கள, அது அம்மா, அப்பா. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,  யாரவேணா இருக்கட்டும், ஒரு நிமிஷம் கூட ஏன் தள்ளி வச்சு பார்க்கணும்?

இந்த உலகத்துலயே சந்தோஷமான விஷயம் எதுனா, அது நமக்கு ரொம்ப பிடிச்சவங்கள சந்தோசமா பாக்குறது தான், அதுவும் அந்த சந்தோசத்துக்கு நாம காரணம்னா அதவிட இந்த உலகத்துல பெரிய விஷயம் எதுவுமே கிடையாது.

படங்கள்: திருவாளர் கூகிளார்  




தினம் ஒரு யோகா முத்திரை - 6

Surya Mudra (சூர்ய முத்திரை):



செய்முறை:

மோதிர விரலை   பெரு விரலால் படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடலில் உள்ள தைரொயிட் சுரபியின் வேலையை ஒழுங்குபடுத்தும். உடல் எடையை குறைக்க மற்றும் கொழுப்பை குறைக்க உதவும்.   படபடப்பை நீக்கும்.  செரிமானத்தை அதிகரிக்கும்.

கால அளவு:

தினமும்  ஒரு 5  நிமிடம் முதல் 15  நிமிடம் வரை காலை மாலை இருவேளையும் செய்து வரவும்.

திங்கள், டிசம்பர் 12, 2011

தேங்காய் பலன

மனிதனின் உயரிய உணவுகளில் தேங்காயும் ஒன்று. நிறைய அன்பர்கள் தேங்காயால்
கொலஸ்ட்ரால் கூடுவதாக எண்ணுகின்றனர். தேங்காயை சமைக்கும் போது முழுமை
பெறாத கொழுப்பில் இருந்து முழுமைப் பெற்ற கொழுப்பாக மாறுகிறது. அதுவே
கொலஸ்ட்ராலாக மாறுகிறது. ஆனால் சமைக்காத தேங்காய், தேங்காய் பால்
மனிதர்களுக்கு மிகுந்த நன்மை புரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக்
கூட்டுகிறது.


தேங்காயில் உள்ள சத்துக்கள்:
நீர்=36%
புரோட்டின்=4.5%
கொழுப்பு=42%
தாது உப்புக்கள்=1%
நார்ச்சத்து=3.6%
மாவுப்பொருள்=13%
கால்சியம்=10 யூனிட்
பாஸ்பரஸ்=240 யூனிட்
இரும்பு=1.7 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் தேங்காய் பாலில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:
சளி, இருமல், ஆஸ்துமா அன்பர்களுக்கு அற்புத பானம்.
மலச்சிக்கல், விலகும். குடல் பூச்சிகள் நீக்கும்.
புற்று நோயை குணப்படுத்தும் உணவு. புலால் உணவை விட உயர்ந்த சக்தி, அதிக
சக்தி தரும் உணவு.
தளராத மன உறுதிக்கு இனிப்புடன் தேங்காய் பால் தினமும் சுவைத்திடுவோம்.

குறிப்பு:
தேங்காய் அல்லது தேங்காய் பாலுடன் இனிப்புக் கலந்து சாப்பிட வேண்டும்.
தனியாகச் சாப்பிடக் கூடாது. கனிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தேங்காய் பாலை எல்லா இயற்கைச் சாறுகளுடனும் இணைத்தும் சாப்பிடலாம்.

தினம் ஒரு யோகா முத்திரை - 5

Shunya Mudra (ஷுன்ய  முத்திரை):



செய்முறை:

நடு விரலை   பெரு விரலால் படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடல் சோர்வை நீக்கும்.  காது வலி இருப்பவர்கள்  ஒரூ  4  அல்லது  5  நிமிடம் செய்தல் சரியாகிவிடும்.  காது கேட்பதில் உள்ள குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குறைபாடுகளை களையும் (அது பிறவி பிழையாக இல்லாவிடில்).

கால அளவு:

தினமும்  ஒரு 45 நிமிடம் எனும்படி தொடர்ந்து செய்து வர வேண்டும்.  நிவாரணம் கிடைக்கும்  வரை.

வெள்ளி, டிசம்பர் 09, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 4

Vayu Mudra (வாயு  முத்திரை):



செய்முறை:

பெரு விரலால்  ஆள்காட்டி விரலை படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

௧. உடலில் வாயுவால் ஏற்படும் தொல்லைகளை நீக்கும். 
௨.cervical spondilaitis எனப்படும் கழுத்து எலும்பு தேய்மானத்தை சரி செய்யும் மேலும் முதுகு தண்டுவட தேய்மானத்தையும் சரி செய்யும்.
௩. ஆர்திரிடிஸ், ருமடிசம், கௌட் எனப்படும் கால் முட்டி வலி மற்றும் பாரிச வாயுவையும் சரி செய்யும்.
௪. வாயுவினால் ஏற்படும் வயிற்று உபதைஹளையும்  சரி செய்யும்.

கால அளவு:

தினமும்  ஒரு 45 நிமிடம் எனும்படி தொடர்ந்து செய்து வர வேண்டும்.  நிவாரணம் கிடைக்கும்  வரை.

வியாழன், டிசம்பர் 08, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 3

Varuna Mudra (வருண  முத்திரை):



செய்முறை:

சுண்டு விரலால் பெரு விரல் நுனியை தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

௧. ரத்தத்தில் உள்ள நீர் அளவை கட்டுபடுத்தும். 
௨. தசை சுருக்கத்தை தடுக்கும்.
௩. இரைப்பை குடல் அலர்சி வராமல் காக்கும்.

செவ்வாய், டிசம்பர் 06, 2011

இரு மனம் இணையும் திருமணம்

நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, இது ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை கதை எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.


அன்று ஒருநாள் நான் வீட்டிற்கு சென்ற பொது என் மனைவி எனக்காக காத்துகொண்டு இருந்தால்.  எனக்கு இரவு உணவை பரிமாறி விடு அவள் எழுந்த போது அவள் கரம் பற்றி அவளை அமர சொன்னேன் "எனக்கு உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்". அதை கேட்ட என் மனைவி என் கண்ணை  ஊடுருவி  என்னை  ஆழமாக  பார்த்தாள்.   பின்  எதுவும்  பேசாமல்  சாப்பிட தொடங்கினாள். அந்த கண்கள் அந்த பார்வை என்னை எதோ செய்வது போல் 
இருந்தது.


என் காலின் கீழே பூமி நழுவுவது போல் ஒரு உணர்வு, என் நாக்கு மேலன்னதோடு ஒட்டிக்கொண்டு வருவேனா பார் என்று பிடிவாதம் பிடித்தது.  ஆனாலும் நான் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பவில்லை.  மெதுவாய் தைரியத்தை வரவழைத்து கொண்டு, என் பார்வை எதோ ஒரு சூனியத்தில் நிலைத்திருக்க, செருமிவிட்டு நான் நினைப்பதை சொல்ல துவங்கினேன்.  ஆமாம் எனக்கு விவாகரத்து வேண்டும்.  இதை மெதுவாக நான் சொல்லி முடித்து விட்டேன். ஆனால், அவளிடம் எந்த சலனமும் இல்லை.  மிக மிக மெதுவாய் என்னிடம் ஏன் என்ற கேள்வியை கேட்டாள்.

அவள் கேட்டது என் காதில் விழாதது போல் மெதுவாய் நகர்ந்தேன். அவள் கோபமாக நாற்காலியை பின்னுக்கு தள்ளிவிட்டு என்னை பார்த்து "நீ ஒரு மனிதனே இல்லை" என்று சொன்னாள். அன்று இரவு ஒரு பெரிய மௌன யுத்தமாக கழிந்தது.  அவள் மெதுவாய் அழுது கொண்டிருந்தது தெரிந்தது.  பாவம் அவளுக்கு எங்கள் திருமண வாழ்கைக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்ள நெஞ்சம் துடித்திருக்கும். என்னால் அதற்கு ஒரு வழுவான
காரணமும் சொல்ல முடியாத படி ஒரு நல்ல வாழ்கையை தான் இது நாள் வரை  அவள் பரிசளித்து இருந்தாள்.  ஆனால் நான் தான் என்னை ஜானகியிடம் இழந்து விட்டேனே.  இவளுக்கு என் மனதில் இனியும் இடம் இல்லை அதை என்னால் இவளிடம் சொல்லவும் முடியவில்லை.  எனக்கு இவளை பார்த்து பரிதாப படுவதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.

என் இதயம் குற்ற உணர்வால் கனத்தது, அந்த உணர்வுடன் ஒரு விவாகரத்து பத்திரத்தை தயார் செய்தேன். என் வீடு, கார் மற்றும் என் கம்பெனியின் 30  விழுக்காடு பங்குகளை அவள் பெயருக்கு எழுதினேன்.  அந்த பத்திரத்தை பார்த்ததும் அவள் சுக்கு நூறாக கிழித்து எறிந்தாள்.  ஒரு  பெண்  அதுவும் என்னுடன் பத்து வருடம் வாழ்தவள் எப்படி ஒரே நாளில் அன்னியமாக முடியும்?  எனக்காக அவள் செய்த தியாகங்கள் எல்லாம் என் கண் முன்னே ஒரு விநாடி படமாய் வந்தது.  எனக்கு அது மிகுந்த வருத்தத்தை  அளித்தது எனினும் எனக்கு ஜானகி மேலிருந்த காதலில் இது ஒன்று பெரிதாக தோன்றவில்லை. கடைசியில் அவள் மிகுந்த சத்தத்துடன் அழ துவங்கினாள், அது அவளுக்கு  சற்று ஆறுதலை கொடுக்கும் என்று நான் எண்ணினேன்.  கடந்த  சில  வாரங்களாக  என்  மனதில்  இருந்த  விவாகரத்து எண்ணம் வலுபெற்று பிடிவாதமாக மாறிக்கொண்டு இருந்தது.

அடுத்த நாள், நான் தாமதமாக வீட்டிற்கு வந்த போது அவள் ஏதோ எழுதிகொண்டிருந்தாள்.  அன்று முழுவதும் ஜானகியுடன் ஊர் சுற்றிவிட்டு வந்ததால் இரவு சாப்பிடாமல் படுத்து உடனே உறங்கியும் விட்டேன்.  அதிகாலை விழிப்பு வந்த போது அவள் இன்னும் எதோ எழுதிக்கொண்டு இருந்தாள். அடுத்த நாள் கலை அவள் என்னிடம் தன்னுடைய விவாகரத்து ஷரத்துகளை கூறினால்.

முதல் ஷரத் என்னவென்றால்,  எங்கள் மகனுக்கு ஒரு மாதத்தில் தேர்வுகள் வருவதால், எங்கள் விவகாரத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்பது.  அதை கூட என்னால் ஏற்றுகொள்ள முடிந்தது ஆனால், அவளது இரண்டாவது ஷரத்தான் எனக்கு அவளுக்கு கிறுக்கு பிடித்து விட்டதோ என்று எண்ண தோன்றியது. அது என்னவென்றால், எங்கள் திருமணத்தன்று  அவளை நான் தூக்கியது போல் தினமும் அவளை நான் தூக்க வேண்டும்.  இதை நான் ஜானகியிடம் சொன்ன போது அவள் கண்களில் கண்ணீர் வரும் வரை சிரித்தாள், பின் சொன்னாள் அவள் என்ன ஜாலம் காட்டினாலும் விவகாரத்தில் irunthu தப்பிக முடியாது என்று.  எனக்கும் அது சரிதான் என்று பட்டது.

எனக்கும்   என் மனைவிக்கும் எந்த நெருக்கமும் இல்லாவிட்டாலும், அவளை தினமும் தூக்கிகொண்டு போகிறேன் என்று ஒத்துகொண்டதால்  கடனே என்று தூக்கி செல்லலாம்  என்று தீர்மானித்தேன்.  முதல் நாள் அவளை தூக்கி செல்லும் போது எங்கள் இருவருக்கும் கொஞ்சம் வெட்கமாக இருந்தது.  ஆனால் எங்கள் மகனுக்கு அது மிகவும் சந்தோசத்தை கொடுத்தது எங்களுக்கு மேலும் எங்களை சங்கடபடுத்தியது.  நான் அவளை தூக்கி கொண்டு நடக்கும் போது அவள் கண்களை மூடிகொண்டு  ரகசியமாய் என் காதில் இதை எங்கள் பையனுக்கு சொல்ல வேண்டாம் என்று சொன்னாள், நானும் தலை ஆட்டினேன், ஆனால் என்னக்கு உள்ளுக்குள் சற்று வருத்தமாக இருந்தது. 

இரண்டாவது நாள்,  எங்கள்  இரண்டு பேருக்குமே இப்படி இருபது சற்று சுலபமாக இருந்தது.  அவள் மெதுவாக என் தோளில் சாய்ந்து கொண்டாள்.  அப்போது தான் எனக்கு, இந்த பெண்ணை எத்தனை நாளாய் நாம் சரியாக கவனிக்கவில்லை  என்று தோன்றியது.  அவளது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் அவள் நரை முடி எங்கள் திருமண வாழ்கையில் அவள் தொலைத்த இளமையை சொல்லியது.  ஒரு நிமிடம் எனக்கு நான் அவளது இப்போதைய நிலைமைக்கு காரணம் என்பது உறுத்தியது.

நான்காவது நாள், நான் அவளை தூக்கும் போது எங்களுக்குள் பழைய அன்னியோன்யம் திரும்பி விட்டதை உணர்ந்தேன்.  ஆறாம் நாள் மற்றும் ஏழாம் நாள் அது நெருக்கம்மாவதை உணர்ந்தேன். ஆனால் இதை நான் ஜானகியிடம் சொல்லவில்லை. மேலும் ஒரு மாதத்தில் அவளை தூக்கி செல்வது மிகவும் எளிதாகி கொண்டு இருந்தது.  இப்ப தூக்கி கொண்டு நடப்பது என்னை பலசாளியாக்கி   கொண்டு இருந்தது. 
அவள் ஒரு நாள் காலை, தனக்கு blouse  தேடி கொண்டு இருந்தாள்.  அவளது அத்தனை
blouseஸ்ம் தொள தொள என்று  இருந்தது.  சட்டென்று, எனக்கு அவள் மெலிந்திருப்பது உரைத்தது.  அதனால் தான் என்னால் அவளை சுலபமாக தூக்கி செல்ல முடிந்தது.  அவள் எத்தனை வேதனைகளை தான் மனதில் ஒளித்து வைத்திருந்திருக்கிறாள். என் மனதால் அவள் இதயத்தை வருடினேன்.
என் மகன் என்னிடம் வந்து அப்பா அம்மாவை தூக்கி செல்லும் நேரம் வந்துவிட்டது என்று சொன்னான்.  நான் அவளை தூக்கி செல்வது வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டது.  என் மனைவி அவனை அருகில்  அழைத்து அணைத்து கொண்டாள்.  நான் என் பார்வையை திருப்பி கொண்டேன், என் முடிவை  மாற்றிக்கொண்டு விடுவேனோ என்று பயந்தேன். அவளை நான் தூக்கிகொண்டு வாசல் வரை வந்தேன். எங்கள் திருமணத்தன்று தூக்கியது போலவே உணர்ந்தேன்.
அவளது மெலிந்த தேகம் என்னை வதைத்தது.  கடைசிநாள் அவள் என் கையை பிடித்த போது என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. என் மகன் பள்ளிக்கூடம் சென்று விட்டான்.  நான் அவளை இறுகி அணைத்து கொண்டு சொன்னனேன்,  நமது  வாழ்கையில் இந்த அன்னியோன்யம் தொலைந்து போயிருந்தது.  பின் நான் எனது அலுவலகத்திற்கு சென்றேன்.  இன்னும் சிறிது நேரம் இருந்தாலும் என் mudivai மாற்றிக்கொண்டு விடுவேனோ என்று பயந்து தான் சட்டென்று கிளம்பினேன்.  ஜானகியை பார்த்து  நான் என்னுடைய விவாகரத்து முடிவை  மற்றிகொன்டத்தை சொன்னேன். 


அவள் என்னை பார்த்து அதிர்ச்சியாய் கேட்டாள், "உனக்கு என்ன ஆச்சு உடம்பு முடியலையா?" என்று.  நான் அவளிடம் என்னை மன்னித்து விடு ஜானகி, எனக்கு என் திருமண வாழ்க்கை சுவாரசியமாக இல்லாததால் தான் இந்த முடிவு தோன்றியிருக்கும் என்று நினைக்கிறேன்.  ஆனால், அது தற்போது அப்படி இல்லை மேலும் நான் வாழ்கையின் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல், அதன் மதிப்பு தெரியாமல் நடந்து கொண்டுவிட்டேன்.  இப்போது தான் எனக்கு அவளை வாழ்க்கை முழுதும் சுமப்பேன் என்று அக்னியை வளம் வந்து செய்த சத்தியம் எதை உண்மையானது என்பது புரிந்தது.  எங்கள் வாழ்க்கையில் மரணம் வரும் வரை இந்த பந்தம் தொடர்வதுதான் உத்தமமான முடிவாக இருக்கமுடியும் என்று சொன்னேன்.  இதை கேட்ட அவள் என் கன்னத்தில் அறைந்தாள்.  நான்  என் வீட்டுக்கு திரும்பினேன். வழியில் ஒரு பூக்கடையில் சிறிது  மல்லிகை பூவும், ஒரு பூங்கொத்தும் வாங்கினேன். அதில், உன்னை தினமும் சுமப்பேன் நம் வாழ்நாள் வரையில் என்று எழுத சொன்னேன்.

 நான் புன்னகையுடனும், பூங்கொத்துடன் என் வீட்டில் நுழைந்த போது அவள் உயிர் அவளிடம் இல்லை. ஆமாம், நான் ஜானகியுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருந்த போது அவள், கேன்சர்ருடன் போராடிக்கொண்டு இருந்திருக்கிறாள். அவளுக்கு தான் ஒரு மாதத்தில் இறந்து விடுவோம் என்பது முன்பே தெரிந்திருந்ததால் தான் விவாகரத்துக்கு இந்த ஒரு மாதம் கெடு கேட்டதும், என்னை தூக்கி கொண்டு செல்ல சொன்னதும், என் மகனின் பார்வையில் என்னை ஒரு அன்பான கணவனாக உயர்த்தி காட்டவே என்பதும் புரிந்தது.

நம் வாழ்கையில் இது போல் சின்ன சின்ன விஷயங்கள் உறவு பாலத்தை நீடிக்க தேவை படும்.  கார், பங்களா, சொத்து சுகம் இவை எல்லாவற்றையும் மீறி வாழ்கையில் நம் சந்தோசத்திற்கு சிறிது அன்னியோநியமும் புரிதலும் தேவை.  நண்பர்களே உங்கள் வாழ்க்கை துணையுடன் தினமும் சிறிது நேரம் செலவழித்து அன்னியோனியத்தை வளர்த்து கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க  உதவும்.

இது என்னுடைய ஈமெயிலில் வந்தது, உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் மொழி மாற்றம்  செய்திருக்கிறேன்.