புதன், நவம்பர் 30, 2011

மைதா - ஓர் எச்சரிக்கை


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி
கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது
பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடுவிருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .
                                                     
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா 

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். 

இது தமிழகம்  எங்கும் கிடைக்கிறது.
வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. 
இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; 
பரோட்டாவும் பிரபலமடைந்தது. 

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,
நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .


இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும்  Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
  
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல 

மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்

இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.
Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .


மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு , நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது  நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் . 
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்கள் .


செவ்வாய், நவம்பர் 29, 2011

பாசிப்பருப்பு இட்லி

பாசிப்பருப்பு இட்லி
தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
ஏலப்பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
ஆப்பசோடா - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து
கரகரப்பாக அரைக்கவும்.
* அதனுடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி, பாதி நெய், ஆப்ப சோடா
சேர்த்து நன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்தில் நீரோ, பாலோ ஊற்றி
கரைத்துக் கொள்ளவும்.
* நெய் தடவிய இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.
* வெந்ததற்கு அடையாளமாக ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வரவேண்டும்.
* துண்டுகள் போட்டு சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

கோதுமை ரவா பொங்கல்

கோதுமை ரவை பொங்கல்

தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவை - 1 கப்
பாசிப்பருப்பு - அரை கப்

நெய் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை:

* பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி இஞ்சி விழுது, மிளகு, சீரகம் சேர்த்து நன்கு பொரிக்கவும்.

* பாசிப்பருப்பை தண்ணீரில் ஒரு முறை களைந்து அதனையும் குக்கரில் இட்டு ஒருமுறை கிளறி விடவும்.

* குக்கரில் 3 கப் தண்ணீரை ஊற்றி, அது நன்கு கொதிக்கையில்
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.


* சம்பா கோதுமை ரவையைக் களைந்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு நன்கு கலந்து விட்டு பிரஷர் குக்கரை மூடி வேகவிடவும்.

* பொங்கல் வெந்து 2 விசில் விட்ட பிறகு 3 நிமிடங்கள் குறைந்த
தீயில் வைத்து அணைக்கவும்.


* பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து பதமாக வெந்த பொங்கலில் கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

புதன், நவம்பர் 09, 2011

எங்கள் வீட்டு கொலு


சின்னக்குழந்தையாய் இருந்த போது இருந்தே நவராத்திரி வந்து விட்டால் ஒரே கோலாகலம் தான்.  அக்கம் பக்கத்துக்கு வீடுகளுக்கு சென்று பாட்டு பாடி(படுத்தி)  விட்டு  அவர்கள்  தரும்  சுண்டலை  வாங்கிக்கொண்டு  எந்த  பொம்மை  போன வருடம   இருந்தது  எது  புதிது  என்று கணக்கெடுத்துவிட்டு அதை பற்றி பேசிகொண்டே அந்த ஒன்பது நாளும் போய்விடும்.   அதுவும் அம்மா  பாடம் படிக்க சொல்லும்போது அந்த வீட்ல கொலுவுக்கு கூப்ட்டாக இந்த வீட்ல கூப்ட்டாகனு நீட்டி முழக்கி பொழுதை கழித்துவிட்டு வீட்டில் திட்டு வங்கி திரிந்த நாட்கள்.

சற்று பெரியவள் ஆனதும் என் வயதை ஒத்த தோழிகள் எல்லாம் வீட்டில் இருந்த வெளியே  வராமல் பேச முடியாமல் இருக்கும் போது, எங்கள் தம்பிகள் மூலம் என்னைக்கு எந்த வீட்டு  கொலுவுக்கு எத்தனை மணிக்கு போவது என்பது தீர்மானம் ஆகும்.  அது தான் நாங்கள் பேசி  கொள்ள நல்ல சந்தர்ப்பம்.  ஊர் கதை உலக கதை எல்லாம் அந்த பொம்மைகள்  காது கிழியும் வரை பேசி தீர்த்து விட்டு வழக்கம் போல் வீட்டில் போய் திட்டு வாங்கியது ஒரு சுகம்.

பின்னர் இது போன்ற சந்தோசத்திற்காக அம்மாவை நம்ம வீட்டிலும் கொலு வைக்கலாம் என்று நச்சு பண்ணி, அப்பா அதை outright ஆக reject  பண்ணியது எல்லாம் அது ஒரு   கனாக்காலம்.


எனக்கு திருமணம் நிச்சயம் ஆனதும் அம்மா வந்து ஆசையாய்  சொன்னது, " அவங்க வீட்ல தலமுறை தலைமுறைய கொலு வக்கிறது வழக்கமாம்". எனக்கு ஒரே சந்தோசம் தலை கால் புரியல.  ஆனா விதி வலியது ஆச்சே நமக்கு புகுந்த வீடோ மதுரை (பொறந்த வீடும் மதுரை தான்)  ஆனா ரெண்டு பேரும் வேலை நிமித்தம் இருந்தது சென்னைல என்ன பண்ண?  ஒன்னும் பண்ண முடியல.  ஆனா ரெண்டு வருசத்தில ரெண்டு பேரும் மதுரை வந்துட்டோம். 



அதுல இருந்து கொலு வந்தாலே ஒரே கொண்டாட்டம் தான்.  (கொஞ்சம் திண்டாட்டமும் தான், அப்புறம் ஆபீஸ் வேலையும் பாக்கணும்ல, எங்க அம்மா மட்டும் இல்ல இது ரொம்ப பெரிய திண்டாடமோ திண்டாட்டம் தான்).   ஒவ்வொரு வருசமும் இந்த வருஷம் ஒரு அருவி பன்றேன் அது லிங்க அபிஷேகம் செய்யும் அதுக்கு இத வாங்குங்க, இந்த வருஷம் கைலாஷ மலை செய்ய போறேன் (அது  வாங்கிட்டு  வந்த சாமான்  பாத்தாம  குன்று ஆனது தனி கதை) அப்படின்னு ஒரு பெரிய budget  போட்டு  வீட்டுகாரரை  கொள்ளை  அடித்து வரவங்க  போறவங்க எல்லாம் உங்க வீட்டு கொலு சூப்பர் அப்படின்னு  பேர் வாங்கரதுக்குள்ள நான் படர பாடு இருக்கே எங்க அப்பா.



ஆனாலும் அது நிச்சயமா ஒரு மகளிர் திருவிழா தான்.  அங்க அங்க இருக்கிற போட்டோ எல்லாம் சட்சாத் எங்க வீட்டு கொலு போட்டோ தான்.  உங்க அபிப்ராயத்தை பின்னூட்டமா போடுங்க.

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள

வாழைப்பூ
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள்
நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும்
புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி
நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற
அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி
சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.
வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு
சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள்
நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக்
கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும்,
பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப்
போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்
போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத்
தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள்
நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல்
போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக் காய்
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும்.
விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

சுண்டைக்காய்
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய்
சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத்
தூண்டும்.

சுரைக்காய்
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி,
நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக்
கொடுக்கும்.

குடைமிளகாய்
வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக
உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சௌசௌ
கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு
உறுதியைக் கொடுக்கும்.

அவரைக்காய்
புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்
உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்
இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி
நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை
சுத்தப்படுத்தும்.

கத்தரி பிஞ்சு
கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை
தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.


குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.


 
ஒரு இல்லம் இனிய இல்லமா அமையுறது பெற்றோரால்தான்.. அந்த இனிய இல்லத்தை அமைக்க
பெற்றோர் குழந்தைகள் உறவு இனிமையா இருக்குறது முக்கியம்.. பெற்றோர்தான் எனவும்.,
பிள்ளைகள் தான் எனவும் குற்றம் சாட்டிக் கொள்வோம். அந்த உறவு என்றும் நீடிச்சு
இருக்க குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது பற்றி., அவங்க பிரச்சனைகளை களைவது
பற்றி ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற வெப்சைட்டையும் ., ஆர் ஏ புரத்திலும்.,
ராயப்பேட்டையிலும் கிளினிக்கும் நடத்திவரும் டாக்டர் திருமதி வசந்திபாபுவை
சந்தித்து நம் வாசகியருக்காக ஆலோசனை தந்துதவுமாறு கேட்டோம். இவர் மனநல
ஆலோசகராகவும்., ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற கவுன்சிலிங்க் கிளினிக்கையும் நடத்தி
வருகிறார்.. சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பிரச்சனைகள் ., ட்ரான்ஸ்ஜெண்டர்களின்
பிரச்சனைகள்., பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி உள்ளார்.

முதலில் எல்லா வீட்டிலும் ஒரு கூட்டுக் குடும்பமா., தாத்தா பாட்டி அரவணைப்பில்
குழந்தைகள் வளர்ந்தார்கள்.. இப்போ சூழ்நிலை மாறி தனிக் குடித்தனத்தில் வேலைக்குச்
செல்லும் பெற்றோருடன் பிள்ளைகள் இருப்பதால்., தனி ரூம் ., ஏசி., கம்ப்யூட்டர்.,
டிவி., செல்ஃபோன்., கிடைப்பதோடு வேலைக்காரர்கள் அல்லது ஆயாவோடு வளர வேண்டிய
கட்டாயம்.. எனவே பிள்ளைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகுறாங்க..

பிறக்கும் போது அனைத்துக் குழந்தைகளும் ஒண்ணுதான்.. வலிமையானவனா இருக்குறதுக்கோ.,
பலவீனமானவனா மாறுவதற்கோ சூழல்தான் காரணம். சரியா இருக்குறதுக்கும் ., தடம்
புரள்றதுக்கும் பெற்றோர்தான் காரணம்.. அவங்க கவனிப்பு இன்மைதான் காரணம். அதை
விட்டுட்டு நான் என் பிள்ளைக்கு அதை செய்தேன் இதை செய்தேன் என நிறைய வசதிகளை
பட்டியல் இடுவாங்க. இதெல்லாம் விட அவங்களுக்கு தேவை அன்பு..

இதுல இருந்து விடுபடுறதுக்கு குழந்தைகளை ஒரு காரணமா காண்பிக்காம பெற்றோர்தான்
மாறணும்.. குழந்தைகளுக்கு கவுன்சிலிங்க் தேவை இல்லை.. பெற்றோருக்குத்தான்
தேவை..திருமணம் முடிந்ததும் கணவன் மனைவி சம்பாதிக்கிறோம் ., பிள்ளைகளைப் பெற்று
விட்டோம் . அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்துவிட்டோம் .. கார்., பங்களா.,
ஏசி., க்ளாஸ்களில் சேர்த்து விடுவது ஆயா. ட்ரைவர் வைப்பது என இருந்து
விடுகிறார்கள்..

ஆனா குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை பார்க்கணும். சாதாரணமா ஒரு குழந்தை இன்னொரு
குழந்தையிடமிருந்து மாறுபடுது. அது பக்கத்துல இருந்து அதை தட்டிக் கொடுத்து
சாதிக்க வைக்கணும். சாதிச்ச குழந்தைக்கு பரிசு கொடுத்து ஊக்குவிக்கணும். தவறு
செய்தா தண்டிக்காம., கண்டிக்கணும். அன்போடு விசாரித்து அதை திருப்பி பண்ணாத மாதிரி
ஒரு அணுகுமுறையை கொண்டு வரணும்..

முக்கியமா பெற்றோர் குழந்தைகள் முன்னாடி சண்டை போடுதல்., திட்டுதலை தவிர்க்கணும்..
அதைத்தான் குழந்தைகள் எளிதில் கத்துக்குவாங்க..

இனி எஃபெக்டிவ் பேரண்ட்ஸா இருக்க பத்துக் கட்டளைகள்..
BEING EFFECTIVE PARENTS.. AND POSITIVE PARENTS..1. BE A ROLE MODEL..:-முன்னுதாரணமாக இருங்கள்.. வீட்டை நாம் சுத்தமாக வைத்தால்தான் குழந்தைகள் கற்றுக்
கொள்ளும்.இப்படி செய் ., அப்படி செய் என வலியுறுத்துவதைவிட நாமே முன்னுதாரணமாகத்
திகழ வேண்டும்..
2. ALOT TIME FOR CHILDREN. :-குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்.. எவ்வளவு வேலை இருந்தாலும்
குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி கூட இருந்தால் வேண்டாத பிரச்சனைகளை சின்ன வயதிலேயே
கண்டுபிடித்து கிள்ளி எறிய முடியும். அது பெரிதாகி குழந்தை அவமானப் படுவதை ., வேறு
பிரச்சனைகள் உருவாவதைத் தடுக்கும்.
3. LOVE THEM TO TEACH THEM TO LOVE THEM ALL:-நிறைய அன்பு செலுத்துங்கள் . அன்பாக சொல்லுங்கள். மத்தவங்ககிட்டயும்.,
வேலை செய்பவர்கள் கிட்டயும் கூட மரியாதை கொடுத்து பேச பழகச் சொல்லுங்கள் அன்பா .,
மரியாதையா பழகணும்.. எல்லாரும் நமக்கு வேணும் என்பதை குழந்தைகள் உணரணும்.

4. LEAD THEM AND DONT FORCE THEM :-
நம்முடைய ஆசைகளை., எதிர்பார்ப்புக்களை ., ஏமாற்றங்களை குழந்தைகள் கிட்ட
திணிக்காதீர்கள். வழி நடத்துங்கள்.. வற்புறுத்தாதீர்கள்.. கை பிடித்து
அழைத்துச் செல்லுங்கள்.. கழுத்தை பிடித்து தள்ளுவது போல் அதைச் செய்.,
இதை படி என வற்புறுத்தாதீர்கள்.. நீ டாக்டரா வரணும். , எஞ்சினியரா
அல்லது டான்சரா வரணும் என கட்டாயப் படுத்தாதீர்கள். எதில்
அவங்களுக்கு இண்டரஸ்ட் இருக்கோ அதில் ஈடுபடுத்துங்கள். உதாரணமா நீச்சல் கத்துக்க
ஆசைப்பட்டா எவ்வளவு தூரம் இருந்தாலும் நேரம் ஒதுக்கி அழைத்துச் செல்லுங்கள்.

முக்கியமா இந்தக் காலத்துல பெற்றோர் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
ஃபோர்ஸ் செய்வதால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகுறாங்க.. திறமைகளைக்
கண்டுபிடித்து ஊக்குவியுங்கள்.. கோ கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்., ஸ்போர்ட்ஸ்.,
ரீடிங்., ஸ்விம்மிங்., பெயிண்டிங் என அவங்க
ஹாபீஸுக்கும் முக்கியத்துவம் கொடுங்க..

5.DONT COMPARE CHILDREN WITH OTHERS. அது அவங்க செல்ஃப் கான்ஃபிடன்ஸை
குறைத்துவிடும். இப்படி செய்யாம தட்டிக் கொடுத்து ஊக்குவியுங்க..

5. TEACH THEM COPING TECHNIQUES:-
நமது குடும்பம் இப்படி என கற்றுக் கொடுக்க வேண்டும்.. எந்த
சூழ்நிலையிலும் வாழக் கற்றுக் கொடுக்க வேண்டும். யார் வீட்டுக்கு
சென்றாலும் அவர்கள் தருவதை உண்ண., மற்றும் தங்க பழகிக் கொள்ள
வேண்டும்.கட்டிலாக இருந்தாலும் தரையாக இருந்தாலும் செல்லும் இடத்திற்கு தகுந்தது
போல் பிள்ளைகள் தங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும். இது ஸ்கூல் ., காலேஜ் .,
ஹாஸ்டலிலும் இருக்க உதவும். வெறும் பந்தாவுக்காக குடும்ப நிலைமை தெரியாமல்
குழந்தைகளை வளர்க்க வேண்டாம்..
6. LET US STAND IN THEIR SHOES:-குழந்தைகள் ஒரு ஏஜுக்கு வந்த பின் தோழமையோட நடத்துங்க.. அவங்க இடத்துல இருந்து
பாருங்க. சிந்தியுங்க.. அவங்களா மாறுங்க. அவங்க வயதுகுத் தகுந்த மாதிரி நாம மாறி
அவங்க இடத்துல இருந்து நாம அனலைஸ் பண்ணா எது கரெக்ட் எது தப்புன்னுதெரியும்.

குழந்தைகள் பட்டம் மாதிரி. அவர்களை பறக்க விடணும்.. ஆனா கண்ட்ரோல் நம்ம கையில்
இருக்கணும். இழுத்துப் பிடிச்சாலோ ., அதிகமா விட்டாலோ ஒண்ணு பட்டம் அறுந்துடும்
அல்லது பறந்திடும்.. எனவே சுதந்திரம் கொடுப்பதிலும் ., கண்டிப்பதிலும் கூட அளவோடு
இருக்கணும்.
7. TEACH THEM GOOD HABBITS.:-நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கைக் கொள்ளச் செய்யுங்க.. நகம் வெட்டுதல்.,
உடல் பராமரிப்பு., பர்சனல் ஹைஜீன் முக்கியம். ஜங்க் ஃபுட்
வாங்கிக் கொடுக்காதீங்க., அவங்களுக்கு விருப்பமான உணவை விருப்பமான
வடிவத்தில் சுவையா செய்து கொடுங்க. அன்போடு பரிமாறுங்க.. கூடுமானவரை இரவு உணவு
சேர்ந்து சாப்பிடணும். அல்லது சனி ஞாயிறு அன்றாவது ஒன்றாக அமர்ந்து சாப்பிடணும்.
அந்த சமயங்களில் நல்ல விஷயங்களை பேசலாம் ., தெரிந்து கொள்ளலாம்.
8. TEACH THEM TIME MANAGEMENT.:-எந்த சமயத்தில் எந்த வேலையை செய்யணும்னு கத்துக் கொடுக்கணும்.
எக்ஸ்போஷர் அதிகமா உள்ள இடத்தில் டி வி., கம்ப்யூட்டரை வைங்க.. அதுக்கும் இந்த
நேரம் வரைதான் பார்க்கணும்னு நேரம் வைங்க.. தனி பெட்ரூமில் வைக்க வேண்டாம். போன்
ஹாலில் பேசும் இடத்திலேயே வைக்கலாம். செல்போனில் மெசெஜ் அனுப்புவது., பேசுவது
எல்லாம் நேரம் காலம் முக்கியம் என கட்டுப்பாடு வைக்கணும்.
9. UNCONDITIONAL LOVE.:-வரைமுறையில்லாத அன்பு கொடுக்கணும். அன்பை விட நல்ல மருந்து கிடையாது.. எந்தப்
பிரச்சனயிலும் அன்பை விட நல்ல மாற்று கிடையாது. தவறை அன்பா கண்டிங்க.. ஆனா
தண்டிக்காதீங்க.. கூப்பிட்டு பேசுங்க.. சொல்லிக் கொடுங்க.. நல்லது கெட்டது
எல்லாம்.. ஒரு வயதுக்கு மேல நண்பனா இருங்க.. ஆலோசனை சொல்லுங்க.. ஏற்றுக்
கொள்வார்கள்.
10. MAKE YOUR CHILDREN'S FRIENDS AS YOUR FRIENDS :-உங்க குழந்தைகளோட நண்பர்களை உங்கள் நண்பர்களா ஆக்கிக் கொள்ளுங்கள். அவங்க மூலம்
உங்க குழந்தையின் எல்லா மூவ்மெண்ட்ஸும் தெரிஞ்சுக்கலாம். அது ஒரு இம்பார்ட்டண்ட்
சீக்ரெட். நல்ல டாக்டிக்ஸ். கூப்பிட்டு விருந்து வைத்தல்., நல்ல இடங்களுக்கு
நண்பர்களோட அழைத்து போதல் இன்னும் உங்களை பிள்ளைகளுக்கு நெருக்கமா உணரவைக்கும்.
ஒரு குடும்பம் இனிய இல்லமா இருக்க அதன் சாவி நம்ம கையிலதான் இருக்கு. அந்த சாவியைக்
கொண்டு நம்ம இல்லத்தை இனிய இல்லமா மாத்துவோம் !!!

நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்களின் விபரம்‏

நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்களின் விபரம்
அசுவனி
பூமுடித்தல், கெர்ப்பதானம், விவாகம், அன்னபிராசனம், பெயர்சூட்டல்,
உபநயனம், வாகனம் வாங்க, வேதசாஸ்திராபியாசம், புதிய ஆடை, ஆபரணம்
வாங்குதல், அரசு பதவி ஏற்க கிரஹாரம்பம், பொன் ஏர் கட்டல், விதை
விதைத்தல், தென்னை, மா, பலா, முதலிய விருக்ஷங்கள் வைத்தல், யாத்திரை போக,
கிரகப்பிரவேசம், பசுத்தொளுவம் கட்ட,

பரணி
தீர்த்த யாத்திரையில் திதி முதலானவை நடத்த, உட்செடிகள் நாட்ட, கத்தரி விதை விதைக்க,

கிருத்திகை
செடிகள் வெட்ட, கடன் நீக்க, வாகனம் விற்க, குழந்தைகளுக்கு முடியெடுத்தல்.

ரோகினி
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், உபநயனம், கல்வி
கற்றல், கிரகப்பிரவேசம், கும்பாபிஷேகம், நவக்கிரக் சாந்தி, வியாபாரம்,
தானியங்கள் இருப்பு வைக்க, கிணறு வெட்ட, வாசர்கள் நாட்ட, பத்திரிகை
வெளியிட, விருந்துண்ண, ஆலயம் ஆரம்பம்,

மிருகசீரிஷம்
விவாகம், ருது, சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் suசூட்டல்,
முடிவாங்க, காது குத்த, அன்னம் ஊட்டுதல், உபநயனம், கல்வி ஆரம்பித்தல்,
ஆபரணம் அணிதல், மனை அமைத்தல், கிராம பிரவேசம், தேவதா பிரதிஷ்டை, கிரகப்
பிரவேசம்,

திருவாதிரை
சூலைக்கு நெருபிட, சிவபூஜை செய்ய, ஆயுதம், கலை கற்றல்

புனர்பூசம்
பூ முடித்தல், சீமந்தம், பெயர், சூட்டல், முடி வாங்க, விருந்து சாப்பிட,
காது குத்த, உபநயனம், கல்வி கற்றல், பதவியேற்றல், வாஸ்து சாந்தி, கிரகப்
பிரவேசம், யாத்திரை, வியாபாரம், புது துணி வாங்க, திருமணம்,
கும்பாபிஷேகம்.

பூசம்
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், முடி வாங்க,
சாஸ்திரம், கலை கற்க, பசு வாங்க, விவசாயம், யாத்திரை, ஆலோசனை சபை கூட,
பதவிப்பிரமாணம் ஏற்க, வாஸ்து சாந்தி, கரும்பு நாட்ட, விவாகம் நடத்த, குடி
போக, ரத்தின நகைகளை அணிய.

ஆயில்யம்
ஜெபம் பூர்த்தி செய்ய, நவக்கிரக் சாந்தி செய்ய, ஆயுதம் வாங்க

மகம்
விவாகம், மந்திரம் கற்க, சந்நியாசி, தவசிகளை தரிசனம் செய்ய,

பூரம்
ஆயுத பிரயோகம் செய்ய, கிரகப்பார்வை நிவர்த்தி செய்ய, அம்பாள் தரிசனம், செய்ய.

உத்திரம்
கெர்ப்பதானம், பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், முடிவாங்க,
விருந்து சாப்பிட, உபநயனம், விவாகம், சாஸ்திரம் செய்ய, விதை விதைக்க,
கும்பாபிஷேகம் செய்ய, கிணறு வெட்ட, நந்தவனம் வைக்க, அரசு அதிகாரி
பார்க்க, கிரகப்பிரவேசம்.

அஸ்தம்
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், முடிவாங்க,
விருந்து சாப்பிட, உபநயனம், விவாகம், சாஸ்திரம் செய்ய, விதை விதைக்க,
குபாபிஷேகம் செய்ய, கிணறு வெட்ட, நந்தவனம் வைக்க, அரசு அதிகாரி பார்க்க,
கிரகப்பிரவேசம்.

சித்திரை
கெர்ப்பதானம், பூ முடித்தம், பெயர் சூட்டல், முடி வாங்க, கல்வி
ஆரம்பிக்க, உபநயனம், விவாகம், வாகனம் வாங்க, அபிஷேகம் செய்ய, தேவதா
பிரதிஷ்டை செய்ய, கிரகப்பிரவேசம், நிச்சயதார்த்தம், கிணறுவேட்ட, அரசு
அதிகாரியை பாரிக்க, பதவி பிரமாணம்.

சுவாதி
கெர்ப்பதானம், பூ முடித்தல், பெயர் சூட்டல், முடி வாங்க, அன்னம், ஊட்ட,
ஜோதிடம் கற்க, மருந்து சாப்பிட, புத்தகம், பத்திரிகை வெளியிட, நவக்கிரக்
ஜெபம், விவகார துவக்கம், கரம் வியாதிகளுக்கு மருந்து சாப்பிட.

விசாகம்
விவசாய தானியங்களை அறுக்க, கிணறு சீறி செய்ய.

அனுஷம்
ருது சாந்தி, பூ முடித்தல், பெயர் சூட்ட, காது, குத்த, உபநயனம், ஆபரணம்
வாங்க, பதவி பிரமாணம், வாகனமேற, கிரகப்பிரவேசம், வாசற்செய்ய, தூண்நாட்ட,
தேவதாபிரதிஷ்டை.

கேட்டை
நகைகள் அளிக்க, ஆயுத வேலைகள் ஆரம்பிக்க, மந்திரம் செய, ஆட்களை நீக்க,
கடன் நீக்க, ரத்தின கற்களை நன்கு அலச, வாஸ்து சாந்தி செய்ய.

மூலம்
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், விருந்துண்ண, வில் வித்தை கற்க,
ஆபரணம் அணிய விவகாரம், பெயர் சூட்டல், உபநயனம், காது குத்த

பூராடம்
கணக்கு பயில, கரும்பு நாட்ட, பழைய கிணறு சேரி செய்ய, புனித ஸ்நாணம்
செய்ய, புனித திதி செய்ய, பிரயாணம் சென்று வர.

உத்திராடம்
கெர்ப்பதானம், பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், காது குத்த, கிராம
கிரகங்களில் சங்கு ஸ்தாபனம் செய்ய, தேவதா பிரதிஷ்டில் விவாகம்,
கிரகப்பிரவேசம்

திருவோணம்
ருது சாந்தி, பூ முடித்தல், விஷ்ணுபலி, நாமகரணம், அன்னம் ஊட்ட, காது
குத்த, உபநயனம், விஷ்ணு கும்பாபிஷேகம், வீடு, மனை ஆரம்பம் செய்ய, பந்தல்
அமைக்க, ஓம சாந்தி, பொன் ஏர் கட்ட, விதை விதைக்க, விவாகம் நடத்த.

அவிட்டம்
பூ முடித்தல், பெயர் சூட்டல், கல்வி கற்க, இயல், இசை, வித்தையை கற்க.

சதயம்
கெர்ப்பதானம், பூ முடித்தல், பெயர் சுட்டால், முடிவாங்க, அன்னம் ஊட்ட,
உபநயனம், வில் வித்தைக் கற்க, வாகனம், வாங்க, தேவதா பிரதிஷ்டை, வியாபார
கணக்கு முடிக்க, பூமி வாங்க, வீட்டு வாங்க, வீடு வாங்க, தொட்டிலில்
குழந்தை வைக்க, புனித யாத்திரை போக.

பூரட்டாதி
பாம்பு செட் அமைக்க, மந்திரம் ஜெபிக்க, விவகாரம் முடிக்க.

உத்திரட்டாதி
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், மரம, செடி, கோடி
வைக்க, கோபுர ஆலய கிரகாரம்பம்; கிணறு புதுபிக்க, விவாகம், குருகுலத்தில்
கல்வி பயில,

ரேவதி
ருத் சாந்தி, பூ முடித்தல், பெயர் சூட்டல், முடிவாங்க, காது குத்த,
அன்னம் ஊட்ட, உபநயனம், விவாகம், வேதம் கற்க, புத்தாடை அணிதல், அணிகலன்களை
அணிய விதை விதைக்க, வெளியூர் புறப்பட, கும்பாபிஷேகம் செய்ய, கடல் கடந்து
செல்ல.

இது ஒரு ஈமெயில் சரக்கு சொந்த சரக்கு அல்ல!!