திங்கள், டிசம்பர் 26, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 7

Prana Mudra (பிரான முத்திரை):

செய்முறை:

மோதிர விரலயும்  சுண்டு  விரலையும்  சேர்த்து    பெரு விரல்  நுனியை   படத்தில்  காண்பித்திருப்பது  போல்  தொட வேண்டும், மற்ற இரண்டு விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடல் வலிமையுரும். நோய் எதிர்ப்பு சக்தி வளரும். கண் பார்வை  குறைபாடு  நீங்கும் வைட்டமின்  குறைபாடு  நீங்கும்.   உடல் தளர்ச்சி சோர்வு நீங்கும்.
கால அளவு:

தினமும்  இயன்ற அளவு செய்து வரலாம்..

வியாழன், டிசம்பர் 15, 2011

துர்வாசரா நீங்கள்?

   இப்போ இருக்கும் பரபரப்பான உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் stress எனப்படும் மனஅழுத்தம் அதிகமாகி கொண்டே வருவதை காணமுடிகிறது.  அதனால் வரும் பின்விளைவுகள் பல, அதில் முக்கியமானது, கோபம்.  நண்டு சிண்டு எல்லாம் மூக்கின் மேல் கோபத்துடன் அலைவதை காணமுடிகிறது.  பொறுமை இன்மையும், இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.  சரி இப்போ என்ன சொல்லவர்ர அப்படின்னு கேட்குறீங்களா?  ஒன்னும் இல்லேங்க, ஒரு ஈமெயில்ல வந்தது எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்னு தோனுச்சு அதான்.

ஒரு நாள் ஒரு துறவி தன்னோட சிஷ்யபிள்ளையை பார்த்து நம்ம ஏன் கோபம் வந்த கத்துரோம்னு தெரியும்னு கேட்டாரு. உடனே அவரோட தொண்டரடிபொடிகள் எல்லாம், நாம நம்ம அமைதியா இழந்திடரோம் அதனால தான் அப்படிணங்க.  அதை கேட்ட அந்த துறவி, சரி அப்படியே வச்சுகிட்டாலும், நம்ம பக்கத்துல இருகிறவன பார்த்து கத வேண்டிய அவசியம் என்ன இருக்கு? நம்ம மெதுவா பேசினாலே கேட்க போகுது இதுக்கு அனாவசியமா ஏன் கத்தனும்னு கேட்டாரு?  கேட்டது குருவாச்சே பதில் சொல்லாம இருக்க முடியுமா? நம்ம சிஷ்யர்களும் எத்தனையோ பதிகளா சொன்னங்க அதையெல்ல மறுத்துட்டாரு   நம்ம  குரு. சரி அப்போ நீங்களே சொல்லிருங்கன்னு சொன்னங்க நம்ம சிஷ்ய புள்ளைங்க.

இப்போ நம்ம துறவி சொன்னாரு, ஒரு மனுஷன் கோபப்படும்போது, அவன் யார் மேல கோபமா இருக்கானோ அவனோட மனச தள்ளிவச்சு பாக்குறான், அதனால, சத்தமா பேசினா தான் அந்த மனுசுக்கு கேக்கும்னு அவனோட மனசும் மூளையும் அவனுக்கு சொல்லுது, அதனால சத்தமா கத்துறான்.  சரி இதே அவன் இன்னொரு ஜீவன் மேல ரொம்ப பிரியமா இருந்த எப்படி பேசுறான், ரொம்ப மெதுவா பேசுறான். ஏன் அந்த மனசு அவன் மனசுக்கு ரொம்ப பக்கமா தெரியறது தான் காரணம்.  இதே ரொம்ப ரொம்ப பிரியமா இருந்தா, ஒரு கண்ணசைவு கூட போதும் வார்த்தையே தேவை இல்லை அப்படின்னு சொன்னாரு.

இதுல இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா, நம்ம பிடிச்சவங்கள, நம்ம வாழ்கைல ஒரு அங்கமா இருகரவங்கள, அது அம்மா, அப்பா. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,  யாரவேணா இருக்கட்டும், ஒரு நிமிஷம் கூட ஏன் தள்ளி வச்சு பார்க்கணும்?

இந்த உலகத்துலயே சந்தோஷமான விஷயம் எதுனா, அது நமக்கு ரொம்ப பிடிச்சவங்கள சந்தோசமா பாக்குறது தான், அதுவும் அந்த சந்தோசத்துக்கு நாம காரணம்னா அதவிட இந்த உலகத்துல பெரிய விஷயம் எதுவுமே கிடையாது.

படங்கள்: திருவாளர் கூகிளார்  




தினம் ஒரு யோகா முத்திரை - 6

Surya Mudra (சூர்ய முத்திரை):



செய்முறை:

மோதிர விரலை   பெரு விரலால் படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடலில் உள்ள தைரொயிட் சுரபியின் வேலையை ஒழுங்குபடுத்தும். உடல் எடையை குறைக்க மற்றும் கொழுப்பை குறைக்க உதவும்.   படபடப்பை நீக்கும்.  செரிமானத்தை அதிகரிக்கும்.

கால அளவு:

தினமும்  ஒரு 5  நிமிடம் முதல் 15  நிமிடம் வரை காலை மாலை இருவேளையும் செய்து வரவும்.

திங்கள், டிசம்பர் 12, 2011

தேங்காய் பலன

மனிதனின் உயரிய உணவுகளில் தேங்காயும் ஒன்று. நிறைய அன்பர்கள் தேங்காயால்
கொலஸ்ட்ரால் கூடுவதாக எண்ணுகின்றனர். தேங்காயை சமைக்கும் போது முழுமை
பெறாத கொழுப்பில் இருந்து முழுமைப் பெற்ற கொழுப்பாக மாறுகிறது. அதுவே
கொலஸ்ட்ராலாக மாறுகிறது. ஆனால் சமைக்காத தேங்காய், தேங்காய் பால்
மனிதர்களுக்கு மிகுந்த நன்மை புரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக்
கூட்டுகிறது.


தேங்காயில் உள்ள சத்துக்கள்:
நீர்=36%
புரோட்டின்=4.5%
கொழுப்பு=42%
தாது உப்புக்கள்=1%
நார்ச்சத்து=3.6%
மாவுப்பொருள்=13%
கால்சியம்=10 யூனிட்
பாஸ்பரஸ்=240 யூனிட்
இரும்பு=1.7 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் தேங்காய் பாலில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:
சளி, இருமல், ஆஸ்துமா அன்பர்களுக்கு அற்புத பானம்.
மலச்சிக்கல், விலகும். குடல் பூச்சிகள் நீக்கும்.
புற்று நோயை குணப்படுத்தும் உணவு. புலால் உணவை விட உயர்ந்த சக்தி, அதிக
சக்தி தரும் உணவு.
தளராத மன உறுதிக்கு இனிப்புடன் தேங்காய் பால் தினமும் சுவைத்திடுவோம்.

குறிப்பு:
தேங்காய் அல்லது தேங்காய் பாலுடன் இனிப்புக் கலந்து சாப்பிட வேண்டும்.
தனியாகச் சாப்பிடக் கூடாது. கனிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தேங்காய் பாலை எல்லா இயற்கைச் சாறுகளுடனும் இணைத்தும் சாப்பிடலாம்.

தினம் ஒரு யோகா முத்திரை - 5

Shunya Mudra (ஷுன்ய  முத்திரை):



செய்முறை:

நடு விரலை   பெரு விரலால் படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடல் சோர்வை நீக்கும்.  காது வலி இருப்பவர்கள்  ஒரூ  4  அல்லது  5  நிமிடம் செய்தல் சரியாகிவிடும்.  காது கேட்பதில் உள்ள குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குறைபாடுகளை களையும் (அது பிறவி பிழையாக இல்லாவிடில்).

கால அளவு:

தினமும்  ஒரு 45 நிமிடம் எனும்படி தொடர்ந்து செய்து வர வேண்டும்.  நிவாரணம் கிடைக்கும்  வரை.

வெள்ளி, டிசம்பர் 09, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 4

Vayu Mudra (வாயு  முத்திரை):



செய்முறை:

பெரு விரலால்  ஆள்காட்டி விரலை படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

௧. உடலில் வாயுவால் ஏற்படும் தொல்லைகளை நீக்கும். 
௨.cervical spondilaitis எனப்படும் கழுத்து எலும்பு தேய்மானத்தை சரி செய்யும் மேலும் முதுகு தண்டுவட தேய்மானத்தையும் சரி செய்யும்.
௩. ஆர்திரிடிஸ், ருமடிசம், கௌட் எனப்படும் கால் முட்டி வலி மற்றும் பாரிச வாயுவையும் சரி செய்யும்.
௪. வாயுவினால் ஏற்படும் வயிற்று உபதைஹளையும்  சரி செய்யும்.

கால அளவு:

தினமும்  ஒரு 45 நிமிடம் எனும்படி தொடர்ந்து செய்து வர வேண்டும்.  நிவாரணம் கிடைக்கும்  வரை.

வியாழன், டிசம்பர் 08, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 3

Varuna Mudra (வருண  முத்திரை):



செய்முறை:

சுண்டு விரலால் பெரு விரல் நுனியை தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

௧. ரத்தத்தில் உள்ள நீர் அளவை கட்டுபடுத்தும். 
௨. தசை சுருக்கத்தை தடுக்கும்.
௩. இரைப்பை குடல் அலர்சி வராமல் காக்கும்.

செவ்வாய், டிசம்பர் 06, 2011

இரு மனம் இணையும் திருமணம்

நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, இது ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை கதை எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.


அன்று ஒருநாள் நான் வீட்டிற்கு சென்ற பொது என் மனைவி எனக்காக காத்துகொண்டு இருந்தால்.  எனக்கு இரவு உணவை பரிமாறி விடு அவள் எழுந்த போது அவள் கரம் பற்றி அவளை அமர சொன்னேன் "எனக்கு உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்". அதை கேட்ட என் மனைவி என் கண்ணை  ஊடுருவி  என்னை  ஆழமாக  பார்த்தாள்.   பின்  எதுவும்  பேசாமல்  சாப்பிட தொடங்கினாள். அந்த கண்கள் அந்த பார்வை என்னை எதோ செய்வது போல் 
இருந்தது.


என் காலின் கீழே பூமி நழுவுவது போல் ஒரு உணர்வு, என் நாக்கு மேலன்னதோடு ஒட்டிக்கொண்டு வருவேனா பார் என்று பிடிவாதம் பிடித்தது.  ஆனாலும் நான் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பவில்லை.  மெதுவாய் தைரியத்தை வரவழைத்து கொண்டு, என் பார்வை எதோ ஒரு சூனியத்தில் நிலைத்திருக்க, செருமிவிட்டு நான் நினைப்பதை சொல்ல துவங்கினேன்.  ஆமாம் எனக்கு விவாகரத்து வேண்டும்.  இதை மெதுவாக நான் சொல்லி முடித்து விட்டேன். ஆனால், அவளிடம் எந்த சலனமும் இல்லை.  மிக மிக மெதுவாய் என்னிடம் ஏன் என்ற கேள்வியை கேட்டாள்.

அவள் கேட்டது என் காதில் விழாதது போல் மெதுவாய் நகர்ந்தேன். அவள் கோபமாக நாற்காலியை பின்னுக்கு தள்ளிவிட்டு என்னை பார்த்து "நீ ஒரு மனிதனே இல்லை" என்று சொன்னாள். அன்று இரவு ஒரு பெரிய மௌன யுத்தமாக கழிந்தது.  அவள் மெதுவாய் அழுது கொண்டிருந்தது தெரிந்தது.  பாவம் அவளுக்கு எங்கள் திருமண வாழ்கைக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்ள நெஞ்சம் துடித்திருக்கும். என்னால் அதற்கு ஒரு வழுவான
காரணமும் சொல்ல முடியாத படி ஒரு நல்ல வாழ்கையை தான் இது நாள் வரை  அவள் பரிசளித்து இருந்தாள்.  ஆனால் நான் தான் என்னை ஜானகியிடம் இழந்து விட்டேனே.  இவளுக்கு என் மனதில் இனியும் இடம் இல்லை அதை என்னால் இவளிடம் சொல்லவும் முடியவில்லை.  எனக்கு இவளை பார்த்து பரிதாப படுவதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.

என் இதயம் குற்ற உணர்வால் கனத்தது, அந்த உணர்வுடன் ஒரு விவாகரத்து பத்திரத்தை தயார் செய்தேன். என் வீடு, கார் மற்றும் என் கம்பெனியின் 30  விழுக்காடு பங்குகளை அவள் பெயருக்கு எழுதினேன்.  அந்த பத்திரத்தை பார்த்ததும் அவள் சுக்கு நூறாக கிழித்து எறிந்தாள்.  ஒரு  பெண்  அதுவும் என்னுடன் பத்து வருடம் வாழ்தவள் எப்படி ஒரே நாளில் அன்னியமாக முடியும்?  எனக்காக அவள் செய்த தியாகங்கள் எல்லாம் என் கண் முன்னே ஒரு விநாடி படமாய் வந்தது.  எனக்கு அது மிகுந்த வருத்தத்தை  அளித்தது எனினும் எனக்கு ஜானகி மேலிருந்த காதலில் இது ஒன்று பெரிதாக தோன்றவில்லை. கடைசியில் அவள் மிகுந்த சத்தத்துடன் அழ துவங்கினாள், அது அவளுக்கு  சற்று ஆறுதலை கொடுக்கும் என்று நான் எண்ணினேன்.  கடந்த  சில  வாரங்களாக  என்  மனதில்  இருந்த  விவாகரத்து எண்ணம் வலுபெற்று பிடிவாதமாக மாறிக்கொண்டு இருந்தது.

அடுத்த நாள், நான் தாமதமாக வீட்டிற்கு வந்த போது அவள் ஏதோ எழுதிகொண்டிருந்தாள்.  அன்று முழுவதும் ஜானகியுடன் ஊர் சுற்றிவிட்டு வந்ததால் இரவு சாப்பிடாமல் படுத்து உடனே உறங்கியும் விட்டேன்.  அதிகாலை விழிப்பு வந்த போது அவள் இன்னும் எதோ எழுதிக்கொண்டு இருந்தாள். அடுத்த நாள் கலை அவள் என்னிடம் தன்னுடைய விவாகரத்து ஷரத்துகளை கூறினால்.

முதல் ஷரத் என்னவென்றால்,  எங்கள் மகனுக்கு ஒரு மாதத்தில் தேர்வுகள் வருவதால், எங்கள் விவகாரத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்பது.  அதை கூட என்னால் ஏற்றுகொள்ள முடிந்தது ஆனால், அவளது இரண்டாவது ஷரத்தான் எனக்கு அவளுக்கு கிறுக்கு பிடித்து விட்டதோ என்று எண்ண தோன்றியது. அது என்னவென்றால், எங்கள் திருமணத்தன்று  அவளை நான் தூக்கியது போல் தினமும் அவளை நான் தூக்க வேண்டும்.  இதை நான் ஜானகியிடம் சொன்ன போது அவள் கண்களில் கண்ணீர் வரும் வரை சிரித்தாள், பின் சொன்னாள் அவள் என்ன ஜாலம் காட்டினாலும் விவகாரத்தில் irunthu தப்பிக முடியாது என்று.  எனக்கும் அது சரிதான் என்று பட்டது.

எனக்கும்   என் மனைவிக்கும் எந்த நெருக்கமும் இல்லாவிட்டாலும், அவளை தினமும் தூக்கிகொண்டு போகிறேன் என்று ஒத்துகொண்டதால்  கடனே என்று தூக்கி செல்லலாம்  என்று தீர்மானித்தேன்.  முதல் நாள் அவளை தூக்கி செல்லும் போது எங்கள் இருவருக்கும் கொஞ்சம் வெட்கமாக இருந்தது.  ஆனால் எங்கள் மகனுக்கு அது மிகவும் சந்தோசத்தை கொடுத்தது எங்களுக்கு மேலும் எங்களை சங்கடபடுத்தியது.  நான் அவளை தூக்கி கொண்டு நடக்கும் போது அவள் கண்களை மூடிகொண்டு  ரகசியமாய் என் காதில் இதை எங்கள் பையனுக்கு சொல்ல வேண்டாம் என்று சொன்னாள், நானும் தலை ஆட்டினேன், ஆனால் என்னக்கு உள்ளுக்குள் சற்று வருத்தமாக இருந்தது. 

இரண்டாவது நாள்,  எங்கள்  இரண்டு பேருக்குமே இப்படி இருபது சற்று சுலபமாக இருந்தது.  அவள் மெதுவாக என் தோளில் சாய்ந்து கொண்டாள்.  அப்போது தான் எனக்கு, இந்த பெண்ணை எத்தனை நாளாய் நாம் சரியாக கவனிக்கவில்லை  என்று தோன்றியது.  அவளது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் அவள் நரை முடி எங்கள் திருமண வாழ்கையில் அவள் தொலைத்த இளமையை சொல்லியது.  ஒரு நிமிடம் எனக்கு நான் அவளது இப்போதைய நிலைமைக்கு காரணம் என்பது உறுத்தியது.

நான்காவது நாள், நான் அவளை தூக்கும் போது எங்களுக்குள் பழைய அன்னியோன்யம் திரும்பி விட்டதை உணர்ந்தேன்.  ஆறாம் நாள் மற்றும் ஏழாம் நாள் அது நெருக்கம்மாவதை உணர்ந்தேன். ஆனால் இதை நான் ஜானகியிடம் சொல்லவில்லை. மேலும் ஒரு மாதத்தில் அவளை தூக்கி செல்வது மிகவும் எளிதாகி கொண்டு இருந்தது.  இப்ப தூக்கி கொண்டு நடப்பது என்னை பலசாளியாக்கி   கொண்டு இருந்தது. 
அவள் ஒரு நாள் காலை, தனக்கு blouse  தேடி கொண்டு இருந்தாள்.  அவளது அத்தனை
blouseஸ்ம் தொள தொள என்று  இருந்தது.  சட்டென்று, எனக்கு அவள் மெலிந்திருப்பது உரைத்தது.  அதனால் தான் என்னால் அவளை சுலபமாக தூக்கி செல்ல முடிந்தது.  அவள் எத்தனை வேதனைகளை தான் மனதில் ஒளித்து வைத்திருந்திருக்கிறாள். என் மனதால் அவள் இதயத்தை வருடினேன்.
என் மகன் என்னிடம் வந்து அப்பா அம்மாவை தூக்கி செல்லும் நேரம் வந்துவிட்டது என்று சொன்னான்.  நான் அவளை தூக்கி செல்வது வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டது.  என் மனைவி அவனை அருகில்  அழைத்து அணைத்து கொண்டாள்.  நான் என் பார்வையை திருப்பி கொண்டேன், என் முடிவை  மாற்றிக்கொண்டு விடுவேனோ என்று பயந்தேன். அவளை நான் தூக்கிகொண்டு வாசல் வரை வந்தேன். எங்கள் திருமணத்தன்று தூக்கியது போலவே உணர்ந்தேன்.
அவளது மெலிந்த தேகம் என்னை வதைத்தது.  கடைசிநாள் அவள் என் கையை பிடித்த போது என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. என் மகன் பள்ளிக்கூடம் சென்று விட்டான்.  நான் அவளை இறுகி அணைத்து கொண்டு சொன்னனேன்,  நமது  வாழ்கையில் இந்த அன்னியோன்யம் தொலைந்து போயிருந்தது.  பின் நான் எனது அலுவலகத்திற்கு சென்றேன்.  இன்னும் சிறிது நேரம் இருந்தாலும் என் mudivai மாற்றிக்கொண்டு விடுவேனோ என்று பயந்து தான் சட்டென்று கிளம்பினேன்.  ஜானகியை பார்த்து  நான் என்னுடைய விவாகரத்து முடிவை  மற்றிகொன்டத்தை சொன்னேன். 


அவள் என்னை பார்த்து அதிர்ச்சியாய் கேட்டாள், "உனக்கு என்ன ஆச்சு உடம்பு முடியலையா?" என்று.  நான் அவளிடம் என்னை மன்னித்து விடு ஜானகி, எனக்கு என் திருமண வாழ்க்கை சுவாரசியமாக இல்லாததால் தான் இந்த முடிவு தோன்றியிருக்கும் என்று நினைக்கிறேன்.  ஆனால், அது தற்போது அப்படி இல்லை மேலும் நான் வாழ்கையின் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல், அதன் மதிப்பு தெரியாமல் நடந்து கொண்டுவிட்டேன்.  இப்போது தான் எனக்கு அவளை வாழ்க்கை முழுதும் சுமப்பேன் என்று அக்னியை வளம் வந்து செய்த சத்தியம் எதை உண்மையானது என்பது புரிந்தது.  எங்கள் வாழ்க்கையில் மரணம் வரும் வரை இந்த பந்தம் தொடர்வதுதான் உத்தமமான முடிவாக இருக்கமுடியும் என்று சொன்னேன்.  இதை கேட்ட அவள் என் கன்னத்தில் அறைந்தாள்.  நான்  என் வீட்டுக்கு திரும்பினேன். வழியில் ஒரு பூக்கடையில் சிறிது  மல்லிகை பூவும், ஒரு பூங்கொத்தும் வாங்கினேன். அதில், உன்னை தினமும் சுமப்பேன் நம் வாழ்நாள் வரையில் என்று எழுத சொன்னேன்.

 நான் புன்னகையுடனும், பூங்கொத்துடன் என் வீட்டில் நுழைந்த போது அவள் உயிர் அவளிடம் இல்லை. ஆமாம், நான் ஜானகியுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருந்த போது அவள், கேன்சர்ருடன் போராடிக்கொண்டு இருந்திருக்கிறாள். அவளுக்கு தான் ஒரு மாதத்தில் இறந்து விடுவோம் என்பது முன்பே தெரிந்திருந்ததால் தான் விவாகரத்துக்கு இந்த ஒரு மாதம் கெடு கேட்டதும், என்னை தூக்கி கொண்டு செல்ல சொன்னதும், என் மகனின் பார்வையில் என்னை ஒரு அன்பான கணவனாக உயர்த்தி காட்டவே என்பதும் புரிந்தது.

நம் வாழ்கையில் இது போல் சின்ன சின்ன விஷயங்கள் உறவு பாலத்தை நீடிக்க தேவை படும்.  கார், பங்களா, சொத்து சுகம் இவை எல்லாவற்றையும் மீறி வாழ்கையில் நம் சந்தோசத்திற்கு சிறிது அன்னியோநியமும் புரிதலும் தேவை.  நண்பர்களே உங்கள் வாழ்க்கை துணையுடன் தினமும் சிறிது நேரம் செலவழித்து அன்னியோனியத்தை வளர்த்து கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க  உதவும்.

இது என்னுடைய ஈமெயிலில் வந்தது, உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் மொழி மாற்றம்  செய்திருக்கிறேன்.
 

தினம் ஒரு யோகா முத்திரை - 2

Prithvi Mudra (ப்ரித்வி  முத்திரை):



செய்முறை:

மோதிர   விரலால் பெரு விரல் நுனியை தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

௧. உடலின் நீர் அளவை கட்டுபடுத்தும்.
௨.குடல் அலர்சி நோய் வராமல் காக்கும்.
௩. தசை சுருக்கம் வராமல் காக்கும்.
௪. ரத்தத்தில் உள்ள நீர் அளவை கட்டுபடுத்தும். 

திங்கள், டிசம்பர் 05, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 1

நம் இந்தியாவிலிருந்து இந்த உலகம் கற்றுகொண்டது எத்தனையோ, அதில் இந்த யோகாவும் முக்கியமனது.  சென்ற வருடம் நான் அமெரிக்க சென்ற பொது எங்கள் அலுவலக அமெரிக்க கிளையில் பணிபுரியும் பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தபோது நமது யோகா மேல் அவர்களுக்கு உள்ள ஈர்ப்பை புரிந்து கொள்ள முடிந்தது.  அந்த பெண் யோகா பயின்றதுடன் அதை தினமும் பயிற்சி செய்துகொண்டு இருப்பதாக கூறியதுடன் வார இறுதி நாட்களில் தனியாக பயிற்சி வகுப்புகள் எடுப்பதாகவும்  கூறினார்.

ஆனால், அத்தகைய அருமையான கலையை இந்த உலகுக்கு அளித்த நாம்,  இதை தொடர்ந்து பழகுவதில், பயிற்சி செய்வதில் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதில் கவனம் செலுத்துகிறோமா?  நிச்சயமாக இல்லை என்பதே நம்மில் பெரும்பாலானவர்களின்  பதிலாக  இருக்கும்.  நம்முடைய  பொக்கிஷத்தை, அடுத்த வீட்டுக்காரன் அனுபவிக்கவும் சொந்தம் கொண்டாடவும் விட்டுவிட்டு,  பஞ்ச பராரியாய் அலைவதில் என்ன பலன்?  கொஞ்சம் சிந்திப்போம் நண்பர்களே...


நம்முடைய  இந்த அலட்சியத்திற்கு நாம் சொல்லும் காரணம், நமக்கு நேரம் இல்லை என்பதே.  ஒரு அருமையான கலையை நம் சமுகத்திற்கு மிக சிறிய அளவிலேனும் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்க்காகவே இந்த பதிவு.  இதில் மிக சிறிய முத்திரைகள், எந்த நேரத்திலும் நாம் செய்ய முடிந்த சில முத்திரைகளை நான் பதிவிட உள்ளேன்.  படித்து பயன் அடைய விரும்புவோர், பயன் அடையலாம்.

Gyan  Mudra (ஞான முத்திரை):



செய்முறை:

ஆட்காட்டி விரலால் பெரு விரல் நுனியை தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

௧. நினைவாற்றல் மற்றும் மூளை செயல் திறன் மேம்படும்.
௨. மனதை ஒரு நிலைபடுத்த மற்றும் தூக்கமின்மை சரியாகும்.
௩. தினமும் பயிற்சி செய்ய மனநிலை குறைபாடுகள் , ஹைச்டேரியா, கோபம், மற்றும் மனச்சோர்வு போன்றவை குணமாகும்.
௪. நாளமில்லா சுரப்பிகள் மற்றும் பிடுயடரி (endocrine  and   pituitary  glands ) தூண்ட பெரும் அதனால் அவற்றின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.

வெள்ளி, டிசம்பர் 02, 2011

முல்லை பெரியார் - உண்மையும் பின்னணியும்

பொதுவாகவே நம்ம ஊர் அரசு அலுவலர்கள் வேலை செய்வது இல்லை என்ற குறையை போக்குவதற்க்காகவே நம்ம PWD முன்னாள் அலுவலர்கள்  தயாரித்த காட்சி கோப்பு .   முல்லை பெரியாறு பற்றிய தெளிவான பார்வையை நமக்கு தருகிறது, அனைவரும் தெரிந்து கொள்ள  வேண்டிய விஷயங்கள் எளிதாய் புரியும் வகையில் உள்ளது.   பார்த்து தெரிந்து கொள்வது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.


நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!!!!!!!!!!!!!


எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் சனிபகவான்தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”.



நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!!  எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.!!!!!!!

படங்கள்:  கூகுள்.