திங்கள், டிசம்பர் 26, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 7

Prana Mudra (பிரான முத்திரை):

செய்முறை:

மோதிர விரலயும்  சுண்டு  விரலையும்  சேர்த்து    பெரு விரல்  நுனியை   படத்தில்  காண்பித்திருப்பது  போல்  தொட வேண்டும், மற்ற இரண்டு விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடல் வலிமையுரும். நோய் எதிர்ப்பு சக்தி வளரும். கண் பார்வை  குறைபாடு  நீங்கும் வைட்டமின்  குறைபாடு  நீங்கும்.   உடல் தளர்ச்சி சோர்வு நீங்கும்.
கால அளவு:

தினமும்  இயன்ற அளவு செய்து வரலாம்..

வியாழன், டிசம்பர் 15, 2011

துர்வாசரா நீங்கள்?

   இப்போ இருக்கும் பரபரப்பான உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் stress எனப்படும் மனஅழுத்தம் அதிகமாகி கொண்டே வருவதை காணமுடிகிறது.  அதனால் வரும் பின்விளைவுகள் பல, அதில் முக்கியமானது, கோபம்.  நண்டு சிண்டு எல்லாம் மூக்கின் மேல் கோபத்துடன் அலைவதை காணமுடிகிறது.  பொறுமை இன்மையும், இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.  சரி இப்போ என்ன சொல்லவர்ர அப்படின்னு கேட்குறீங்களா?  ஒன்னும் இல்லேங்க, ஒரு ஈமெயில்ல வந்தது எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்னு தோனுச்சு அதான்.

ஒரு நாள் ஒரு துறவி தன்னோட சிஷ்யபிள்ளையை பார்த்து நம்ம ஏன் கோபம் வந்த கத்துரோம்னு தெரியும்னு கேட்டாரு. உடனே அவரோட தொண்டரடிபொடிகள் எல்லாம், நாம நம்ம அமைதியா இழந்திடரோம் அதனால தான் அப்படிணங்க.  அதை கேட்ட அந்த துறவி, சரி அப்படியே வச்சுகிட்டாலும், நம்ம பக்கத்துல இருகிறவன பார்த்து கத வேண்டிய அவசியம் என்ன இருக்கு? நம்ம மெதுவா பேசினாலே கேட்க போகுது இதுக்கு அனாவசியமா ஏன் கத்தனும்னு கேட்டாரு?  கேட்டது குருவாச்சே பதில் சொல்லாம இருக்க முடியுமா? நம்ம சிஷ்யர்களும் எத்தனையோ பதிகளா சொன்னங்க அதையெல்ல மறுத்துட்டாரு   நம்ம  குரு. சரி அப்போ நீங்களே சொல்லிருங்கன்னு சொன்னங்க நம்ம சிஷ்ய புள்ளைங்க.

இப்போ நம்ம துறவி சொன்னாரு, ஒரு மனுஷன் கோபப்படும்போது, அவன் யார் மேல கோபமா இருக்கானோ அவனோட மனச தள்ளிவச்சு பாக்குறான், அதனால, சத்தமா பேசினா தான் அந்த மனுசுக்கு கேக்கும்னு அவனோட மனசும் மூளையும் அவனுக்கு சொல்லுது, அதனால சத்தமா கத்துறான்.  சரி இதே அவன் இன்னொரு ஜீவன் மேல ரொம்ப பிரியமா இருந்த எப்படி பேசுறான், ரொம்ப மெதுவா பேசுறான். ஏன் அந்த மனசு அவன் மனசுக்கு ரொம்ப பக்கமா தெரியறது தான் காரணம்.  இதே ரொம்ப ரொம்ப பிரியமா இருந்தா, ஒரு கண்ணசைவு கூட போதும் வார்த்தையே தேவை இல்லை அப்படின்னு சொன்னாரு.

இதுல இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா, நம்ம பிடிச்சவங்கள, நம்ம வாழ்கைல ஒரு அங்கமா இருகரவங்கள, அது அம்மா, அப்பா. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,  யாரவேணா இருக்கட்டும், ஒரு நிமிஷம் கூட ஏன் தள்ளி வச்சு பார்க்கணும்?

இந்த உலகத்துலயே சந்தோஷமான விஷயம் எதுனா, அது நமக்கு ரொம்ப பிடிச்சவங்கள சந்தோசமா பாக்குறது தான், அதுவும் அந்த சந்தோசத்துக்கு நாம காரணம்னா அதவிட இந்த உலகத்துல பெரிய விஷயம் எதுவுமே கிடையாது.

படங்கள்: திருவாளர் கூகிளார்  




தினம் ஒரு யோகா முத்திரை - 6

Surya Mudra (சூர்ய முத்திரை):



செய்முறை:

மோதிர விரலை   பெரு விரலால் படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடலில் உள்ள தைரொயிட் சுரபியின் வேலையை ஒழுங்குபடுத்தும். உடல் எடையை குறைக்க மற்றும் கொழுப்பை குறைக்க உதவும்.   படபடப்பை நீக்கும்.  செரிமானத்தை அதிகரிக்கும்.

கால அளவு:

தினமும்  ஒரு 5  நிமிடம் முதல் 15  நிமிடம் வரை காலை மாலை இருவேளையும் செய்து வரவும்.

திங்கள், டிசம்பர் 12, 2011

தேங்காய் பலன

மனிதனின் உயரிய உணவுகளில் தேங்காயும் ஒன்று. நிறைய அன்பர்கள் தேங்காயால்
கொலஸ்ட்ரால் கூடுவதாக எண்ணுகின்றனர். தேங்காயை சமைக்கும் போது முழுமை
பெறாத கொழுப்பில் இருந்து முழுமைப் பெற்ற கொழுப்பாக மாறுகிறது. அதுவே
கொலஸ்ட்ராலாக மாறுகிறது. ஆனால் சமைக்காத தேங்காய், தேங்காய் பால்
மனிதர்களுக்கு மிகுந்த நன்மை புரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக்
கூட்டுகிறது.


தேங்காயில் உள்ள சத்துக்கள்:
நீர்=36%
புரோட்டின்=4.5%
கொழுப்பு=42%
தாது உப்புக்கள்=1%
நார்ச்சத்து=3.6%
மாவுப்பொருள்=13%
கால்சியம்=10 யூனிட்
பாஸ்பரஸ்=240 யூனிட்
இரும்பு=1.7 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் தேங்காய் பாலில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:
சளி, இருமல், ஆஸ்துமா அன்பர்களுக்கு அற்புத பானம்.
மலச்சிக்கல், விலகும். குடல் பூச்சிகள் நீக்கும்.
புற்று நோயை குணப்படுத்தும் உணவு. புலால் உணவை விட உயர்ந்த சக்தி, அதிக
சக்தி தரும் உணவு.
தளராத மன உறுதிக்கு இனிப்புடன் தேங்காய் பால் தினமும் சுவைத்திடுவோம்.

குறிப்பு:
தேங்காய் அல்லது தேங்காய் பாலுடன் இனிப்புக் கலந்து சாப்பிட வேண்டும்.
தனியாகச் சாப்பிடக் கூடாது. கனிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தேங்காய் பாலை எல்லா இயற்கைச் சாறுகளுடனும் இணைத்தும் சாப்பிடலாம்.

தினம் ஒரு யோகா முத்திரை - 5

Shunya Mudra (ஷுன்ய  முத்திரை):



செய்முறை:

நடு விரலை   பெரு விரலால் படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடல் சோர்வை நீக்கும்.  காது வலி இருப்பவர்கள்  ஒரூ  4  அல்லது  5  நிமிடம் செய்தல் சரியாகிவிடும்.  காது கேட்பதில் உள்ள குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குறைபாடுகளை களையும் (அது பிறவி பிழையாக இல்லாவிடில்).

கால அளவு:

தினமும்  ஒரு 45 நிமிடம் எனும்படி தொடர்ந்து செய்து வர வேண்டும்.  நிவாரணம் கிடைக்கும்  வரை.

வெள்ளி, டிசம்பர் 09, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 4

Vayu Mudra (வாயு  முத்திரை):



செய்முறை:

பெரு விரலால்  ஆள்காட்டி விரலை படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

௧. உடலில் வாயுவால் ஏற்படும் தொல்லைகளை நீக்கும். 
௨.cervical spondilaitis எனப்படும் கழுத்து எலும்பு தேய்மானத்தை சரி செய்யும் மேலும் முதுகு தண்டுவட தேய்மானத்தையும் சரி செய்யும்.
௩. ஆர்திரிடிஸ், ருமடிசம், கௌட் எனப்படும் கால் முட்டி வலி மற்றும் பாரிச வாயுவையும் சரி செய்யும்.
௪. வாயுவினால் ஏற்படும் வயிற்று உபதைஹளையும்  சரி செய்யும்.

கால அளவு:

தினமும்  ஒரு 45 நிமிடம் எனும்படி தொடர்ந்து செய்து வர வேண்டும்.  நிவாரணம் கிடைக்கும்  வரை.

வியாழன், டிசம்பர் 08, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 3

Varuna Mudra (வருண  முத்திரை):



செய்முறை:

சுண்டு விரலால் பெரு விரல் நுனியை தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

௧. ரத்தத்தில் உள்ள நீர் அளவை கட்டுபடுத்தும். 
௨. தசை சுருக்கத்தை தடுக்கும்.
௩. இரைப்பை குடல் அலர்சி வராமல் காக்கும்.

செவ்வாய், டிசம்பர் 06, 2011

இரு மனம் இணையும் திருமணம்

நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, இது ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை கதை எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.


அன்று ஒருநாள் நான் வீட்டிற்கு சென்ற பொது என் மனைவி எனக்காக காத்துகொண்டு இருந்தால்.  எனக்கு இரவு உணவை பரிமாறி விடு அவள் எழுந்த போது அவள் கரம் பற்றி அவளை அமர சொன்னேன் "எனக்கு உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்". அதை கேட்ட என் மனைவி என் கண்ணை  ஊடுருவி  என்னை  ஆழமாக  பார்த்தாள்.   பின்  எதுவும்  பேசாமல்  சாப்பிட தொடங்கினாள். அந்த கண்கள் அந்த பார்வை என்னை எதோ செய்வது போல் 
இருந்தது.


என் காலின் கீழே பூமி நழுவுவது போல் ஒரு உணர்வு, என் நாக்கு மேலன்னதோடு ஒட்டிக்கொண்டு வருவேனா பார் என்று பிடிவாதம் பிடித்தது.  ஆனாலும் நான் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பவில்லை.  மெதுவாய் தைரியத்தை வரவழைத்து கொண்டு, என் பார்வை எதோ ஒரு சூனியத்தில் நிலைத்திருக்க, செருமிவிட்டு நான் நினைப்பதை சொல்ல துவங்கினேன்.  ஆமாம் எனக்கு விவாகரத்து வேண்டும்.  இதை மெதுவாக நான் சொல்லி முடித்து விட்டேன். ஆனால், அவளிடம் எந்த சலனமும் இல்லை.  மிக மிக மெதுவாய் என்னிடம் ஏன் என்ற கேள்வியை கேட்டாள்.

அவள் கேட்டது என் காதில் விழாதது போல் மெதுவாய் நகர்ந்தேன். அவள் கோபமாக நாற்காலியை பின்னுக்கு தள்ளிவிட்டு என்னை பார்த்து "நீ ஒரு மனிதனே இல்லை" என்று சொன்னாள். அன்று இரவு ஒரு பெரிய மௌன யுத்தமாக கழிந்தது.  அவள் மெதுவாய் அழுது கொண்டிருந்தது தெரிந்தது.  பாவம் அவளுக்கு எங்கள் திருமண வாழ்கைக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்ள நெஞ்சம் துடித்திருக்கும். என்னால் அதற்கு ஒரு வழுவான
காரணமும் சொல்ல முடியாத படி ஒரு நல்ல வாழ்கையை தான் இது நாள் வரை  அவள் பரிசளித்து இருந்தாள்.  ஆனால் நான் தான் என்னை ஜானகியிடம் இழந்து விட்டேனே.  இவளுக்கு என் மனதில் இனியும் இடம் இல்லை அதை என்னால் இவளிடம் சொல்லவும் முடியவில்லை.  எனக்கு இவளை பார்த்து பரிதாப படுவதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.

என் இதயம் குற்ற உணர்வால் கனத்தது, அந்த உணர்வுடன் ஒரு விவாகரத்து பத்திரத்தை தயார் செய்தேன். என் வீடு, கார் மற்றும் என் கம்பெனியின் 30  விழுக்காடு பங்குகளை அவள் பெயருக்கு எழுதினேன்.  அந்த பத்திரத்தை பார்த்ததும் அவள் சுக்கு நூறாக கிழித்து எறிந்தாள்.  ஒரு  பெண்  அதுவும் என்னுடன் பத்து வருடம் வாழ்தவள் எப்படி ஒரே நாளில் அன்னியமாக முடியும்?  எனக்காக அவள் செய்த தியாகங்கள் எல்லாம் என் கண் முன்னே ஒரு விநாடி படமாய் வந்தது.  எனக்கு அது மிகுந்த வருத்தத்தை  அளித்தது எனினும் எனக்கு ஜானகி மேலிருந்த காதலில் இது ஒன்று பெரிதாக தோன்றவில்லை. கடைசியில் அவள் மிகுந்த சத்தத்துடன் அழ துவங்கினாள், அது அவளுக்கு  சற்று ஆறுதலை கொடுக்கும் என்று நான் எண்ணினேன்.  கடந்த  சில  வாரங்களாக  என்  மனதில்  இருந்த  விவாகரத்து எண்ணம் வலுபெற்று பிடிவாதமாக மாறிக்கொண்டு இருந்தது.

அடுத்த நாள், நான் தாமதமாக வீட்டிற்கு வந்த போது அவள் ஏதோ எழுதிகொண்டிருந்தாள்.  அன்று முழுவதும் ஜானகியுடன் ஊர் சுற்றிவிட்டு வந்ததால் இரவு சாப்பிடாமல் படுத்து உடனே உறங்கியும் விட்டேன்.  அதிகாலை விழிப்பு வந்த போது அவள் இன்னும் எதோ எழுதிக்கொண்டு இருந்தாள். அடுத்த நாள் கலை அவள் என்னிடம் தன்னுடைய விவாகரத்து ஷரத்துகளை கூறினால்.

முதல் ஷரத் என்னவென்றால்,  எங்கள் மகனுக்கு ஒரு மாதத்தில் தேர்வுகள் வருவதால், எங்கள் விவகாரத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்பது.  அதை கூட என்னால் ஏற்றுகொள்ள முடிந்தது ஆனால், அவளது இரண்டாவது ஷரத்தான் எனக்கு அவளுக்கு கிறுக்கு பிடித்து விட்டதோ என்று எண்ண தோன்றியது. அது என்னவென்றால், எங்கள் திருமணத்தன்று  அவளை நான் தூக்கியது போல் தினமும் அவளை நான் தூக்க வேண்டும்.  இதை நான் ஜானகியிடம் சொன்ன போது அவள் கண்களில் கண்ணீர் வரும் வரை சிரித்தாள், பின் சொன்னாள் அவள் என்ன ஜாலம் காட்டினாலும் விவகாரத்தில் irunthu தப்பிக முடியாது என்று.  எனக்கும் அது சரிதான் என்று பட்டது.

எனக்கும்   என் மனைவிக்கும் எந்த நெருக்கமும் இல்லாவிட்டாலும், அவளை தினமும் தூக்கிகொண்டு போகிறேன் என்று ஒத்துகொண்டதால்  கடனே என்று தூக்கி செல்லலாம்  என்று தீர்மானித்தேன்.  முதல் நாள் அவளை தூக்கி செல்லும் போது எங்கள் இருவருக்கும் கொஞ்சம் வெட்கமாக இருந்தது.  ஆனால் எங்கள் மகனுக்கு அது மிகவும் சந்தோசத்தை கொடுத்தது எங்களுக்கு மேலும் எங்களை சங்கடபடுத்தியது.  நான் அவளை தூக்கி கொண்டு நடக்கும் போது அவள் கண்களை மூடிகொண்டு  ரகசியமாய் என் காதில் இதை எங்கள் பையனுக்கு சொல்ல வேண்டாம் என்று சொன்னாள், நானும் தலை ஆட்டினேன், ஆனால் என்னக்கு உள்ளுக்குள் சற்று வருத்தமாக இருந்தது. 

இரண்டாவது நாள்,  எங்கள்  இரண்டு பேருக்குமே இப்படி இருபது சற்று சுலபமாக இருந்தது.  அவள் மெதுவாக என் தோளில் சாய்ந்து கொண்டாள்.  அப்போது தான் எனக்கு, இந்த பெண்ணை எத்தனை நாளாய் நாம் சரியாக கவனிக்கவில்லை  என்று தோன்றியது.  அவளது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் அவள் நரை முடி எங்கள் திருமண வாழ்கையில் அவள் தொலைத்த இளமையை சொல்லியது.  ஒரு நிமிடம் எனக்கு நான் அவளது இப்போதைய நிலைமைக்கு காரணம் என்பது உறுத்தியது.

நான்காவது நாள், நான் அவளை தூக்கும் போது எங்களுக்குள் பழைய அன்னியோன்யம் திரும்பி விட்டதை உணர்ந்தேன்.  ஆறாம் நாள் மற்றும் ஏழாம் நாள் அது நெருக்கம்மாவதை உணர்ந்தேன். ஆனால் இதை நான் ஜானகியிடம் சொல்லவில்லை. மேலும் ஒரு மாதத்தில் அவளை தூக்கி செல்வது மிகவும் எளிதாகி கொண்டு இருந்தது.  இப்ப தூக்கி கொண்டு நடப்பது என்னை பலசாளியாக்கி   கொண்டு இருந்தது. 
அவள் ஒரு நாள் காலை, தனக்கு blouse  தேடி கொண்டு இருந்தாள்.  அவளது அத்தனை
blouseஸ்ம் தொள தொள என்று  இருந்தது.  சட்டென்று, எனக்கு அவள் மெலிந்திருப்பது உரைத்தது.  அதனால் தான் என்னால் அவளை சுலபமாக தூக்கி செல்ல முடிந்தது.  அவள் எத்தனை வேதனைகளை தான் மனதில் ஒளித்து வைத்திருந்திருக்கிறாள். என் மனதால் அவள் இதயத்தை வருடினேன்.
என் மகன் என்னிடம் வந்து அப்பா அம்மாவை தூக்கி செல்லும் நேரம் வந்துவிட்டது என்று சொன்னான்.  நான் அவளை தூக்கி செல்வது வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டது.  என் மனைவி அவனை அருகில்  அழைத்து அணைத்து கொண்டாள்.  நான் என் பார்வையை திருப்பி கொண்டேன், என் முடிவை  மாற்றிக்கொண்டு விடுவேனோ என்று பயந்தேன். அவளை நான் தூக்கிகொண்டு வாசல் வரை வந்தேன். எங்கள் திருமணத்தன்று தூக்கியது போலவே உணர்ந்தேன்.
அவளது மெலிந்த தேகம் என்னை வதைத்தது.  கடைசிநாள் அவள் என் கையை பிடித்த போது என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. என் மகன் பள்ளிக்கூடம் சென்று விட்டான்.  நான் அவளை இறுகி அணைத்து கொண்டு சொன்னனேன்,  நமது  வாழ்கையில் இந்த அன்னியோன்யம் தொலைந்து போயிருந்தது.  பின் நான் எனது அலுவலகத்திற்கு சென்றேன்.  இன்னும் சிறிது நேரம் இருந்தாலும் என் mudivai மாற்றிக்கொண்டு விடுவேனோ என்று பயந்து தான் சட்டென்று கிளம்பினேன்.  ஜானகியை பார்த்து  நான் என்னுடைய விவாகரத்து முடிவை  மற்றிகொன்டத்தை சொன்னேன். 


அவள் என்னை பார்த்து அதிர்ச்சியாய் கேட்டாள், "உனக்கு என்ன ஆச்சு உடம்பு முடியலையா?" என்று.  நான் அவளிடம் என்னை மன்னித்து விடு ஜானகி, எனக்கு என் திருமண வாழ்க்கை சுவாரசியமாக இல்லாததால் தான் இந்த முடிவு தோன்றியிருக்கும் என்று நினைக்கிறேன்.  ஆனால், அது தற்போது அப்படி இல்லை மேலும் நான் வாழ்கையின் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல், அதன் மதிப்பு தெரியாமல் நடந்து கொண்டுவிட்டேன்.  இப்போது தான் எனக்கு அவளை வாழ்க்கை முழுதும் சுமப்பேன் என்று அக்னியை வளம் வந்து செய்த சத்தியம் எதை உண்மையானது என்பது புரிந்தது.  எங்கள் வாழ்க்கையில் மரணம் வரும் வரை இந்த பந்தம் தொடர்வதுதான் உத்தமமான முடிவாக இருக்கமுடியும் என்று சொன்னேன்.  இதை கேட்ட அவள் என் கன்னத்தில் அறைந்தாள்.  நான்  என் வீட்டுக்கு திரும்பினேன். வழியில் ஒரு பூக்கடையில் சிறிது  மல்லிகை பூவும், ஒரு பூங்கொத்தும் வாங்கினேன். அதில், உன்னை தினமும் சுமப்பேன் நம் வாழ்நாள் வரையில் என்று எழுத சொன்னேன்.

 நான் புன்னகையுடனும், பூங்கொத்துடன் என் வீட்டில் நுழைந்த போது அவள் உயிர் அவளிடம் இல்லை. ஆமாம், நான் ஜானகியுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருந்த போது அவள், கேன்சர்ருடன் போராடிக்கொண்டு இருந்திருக்கிறாள். அவளுக்கு தான் ஒரு மாதத்தில் இறந்து விடுவோம் என்பது முன்பே தெரிந்திருந்ததால் தான் விவாகரத்துக்கு இந்த ஒரு மாதம் கெடு கேட்டதும், என்னை தூக்கி கொண்டு செல்ல சொன்னதும், என் மகனின் பார்வையில் என்னை ஒரு அன்பான கணவனாக உயர்த்தி காட்டவே என்பதும் புரிந்தது.

நம் வாழ்கையில் இது போல் சின்ன சின்ன விஷயங்கள் உறவு பாலத்தை நீடிக்க தேவை படும்.  கார், பங்களா, சொத்து சுகம் இவை எல்லாவற்றையும் மீறி வாழ்கையில் நம் சந்தோசத்திற்கு சிறிது அன்னியோநியமும் புரிதலும் தேவை.  நண்பர்களே உங்கள் வாழ்க்கை துணையுடன் தினமும் சிறிது நேரம் செலவழித்து அன்னியோனியத்தை வளர்த்து கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க  உதவும்.

இது என்னுடைய ஈமெயிலில் வந்தது, உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் மொழி மாற்றம்  செய்திருக்கிறேன்.
 

தினம் ஒரு யோகா முத்திரை - 2

Prithvi Mudra (ப்ரித்வி  முத்திரை):



செய்முறை:

மோதிர   விரலால் பெரு விரல் நுனியை தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

௧. உடலின் நீர் அளவை கட்டுபடுத்தும்.
௨.குடல் அலர்சி நோய் வராமல் காக்கும்.
௩. தசை சுருக்கம் வராமல் காக்கும்.
௪. ரத்தத்தில் உள்ள நீர் அளவை கட்டுபடுத்தும். 

திங்கள், டிசம்பர் 05, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 1

நம் இந்தியாவிலிருந்து இந்த உலகம் கற்றுகொண்டது எத்தனையோ, அதில் இந்த யோகாவும் முக்கியமனது.  சென்ற வருடம் நான் அமெரிக்க சென்ற பொது எங்கள் அலுவலக அமெரிக்க கிளையில் பணிபுரியும் பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தபோது நமது யோகா மேல் அவர்களுக்கு உள்ள ஈர்ப்பை புரிந்து கொள்ள முடிந்தது.  அந்த பெண் யோகா பயின்றதுடன் அதை தினமும் பயிற்சி செய்துகொண்டு இருப்பதாக கூறியதுடன் வார இறுதி நாட்களில் தனியாக பயிற்சி வகுப்புகள் எடுப்பதாகவும்  கூறினார்.

ஆனால், அத்தகைய அருமையான கலையை இந்த உலகுக்கு அளித்த நாம்,  இதை தொடர்ந்து பழகுவதில், பயிற்சி செய்வதில் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதில் கவனம் செலுத்துகிறோமா?  நிச்சயமாக இல்லை என்பதே நம்மில் பெரும்பாலானவர்களின்  பதிலாக  இருக்கும்.  நம்முடைய  பொக்கிஷத்தை, அடுத்த வீட்டுக்காரன் அனுபவிக்கவும் சொந்தம் கொண்டாடவும் விட்டுவிட்டு,  பஞ்ச பராரியாய் அலைவதில் என்ன பலன்?  கொஞ்சம் சிந்திப்போம் நண்பர்களே...


நம்முடைய  இந்த அலட்சியத்திற்கு நாம் சொல்லும் காரணம், நமக்கு நேரம் இல்லை என்பதே.  ஒரு அருமையான கலையை நம் சமுகத்திற்கு மிக சிறிய அளவிலேனும் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்க்காகவே இந்த பதிவு.  இதில் மிக சிறிய முத்திரைகள், எந்த நேரத்திலும் நாம் செய்ய முடிந்த சில முத்திரைகளை நான் பதிவிட உள்ளேன்.  படித்து பயன் அடைய விரும்புவோர், பயன் அடையலாம்.

Gyan  Mudra (ஞான முத்திரை):



செய்முறை:

ஆட்காட்டி விரலால் பெரு விரல் நுனியை தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

௧. நினைவாற்றல் மற்றும் மூளை செயல் திறன் மேம்படும்.
௨. மனதை ஒரு நிலைபடுத்த மற்றும் தூக்கமின்மை சரியாகும்.
௩. தினமும் பயிற்சி செய்ய மனநிலை குறைபாடுகள் , ஹைச்டேரியா, கோபம், மற்றும் மனச்சோர்வு போன்றவை குணமாகும்.
௪. நாளமில்லா சுரப்பிகள் மற்றும் பிடுயடரி (endocrine  and   pituitary  glands ) தூண்ட பெரும் அதனால் அவற்றின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.

வெள்ளி, டிசம்பர் 02, 2011

முல்லை பெரியார் - உண்மையும் பின்னணியும்

பொதுவாகவே நம்ம ஊர் அரசு அலுவலர்கள் வேலை செய்வது இல்லை என்ற குறையை போக்குவதற்க்காகவே நம்ம PWD முன்னாள் அலுவலர்கள்  தயாரித்த காட்சி கோப்பு .   முல்லை பெரியாறு பற்றிய தெளிவான பார்வையை நமக்கு தருகிறது, அனைவரும் தெரிந்து கொள்ள  வேண்டிய விஷயங்கள் எளிதாய் புரியும் வகையில் உள்ளது.   பார்த்து தெரிந்து கொள்வது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.


நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!!!!!!!!!!!!!


எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் சனிபகவான்தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”.



நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!!  எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.!!!!!!!

படங்கள்:  கூகுள்.

புதன், நவம்பர் 30, 2011

மைதா - ஓர் எச்சரிக்கை


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி
கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது
பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடுவிருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .
                                                     
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா 

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். 

இது தமிழகம்  எங்கும் கிடைக்கிறது.
வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. 
இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; 
பரோட்டாவும் பிரபலமடைந்தது. 

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,
நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .


இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும்  Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
  
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல 

மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்

இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.
Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .


மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு , நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது  நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் . 
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்கள் .


செவ்வாய், நவம்பர் 29, 2011

பாசிப்பருப்பு இட்லி

பாசிப்பருப்பு இட்லி
தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
ஏலப்பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
ஆப்பசோடா - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து
கரகரப்பாக அரைக்கவும்.
* அதனுடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி, பாதி நெய், ஆப்ப சோடா
சேர்த்து நன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்தில் நீரோ, பாலோ ஊற்றி
கரைத்துக் கொள்ளவும்.
* நெய் தடவிய இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.
* வெந்ததற்கு அடையாளமாக ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வரவேண்டும்.
* துண்டுகள் போட்டு சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

கோதுமை ரவா பொங்கல்

கோதுமை ரவை பொங்கல்

தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவை - 1 கப்
பாசிப்பருப்பு - அரை கப்

நெய் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை:

* பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி இஞ்சி விழுது, மிளகு, சீரகம் சேர்த்து நன்கு பொரிக்கவும்.

* பாசிப்பருப்பை தண்ணீரில் ஒரு முறை களைந்து அதனையும் குக்கரில் இட்டு ஒருமுறை கிளறி விடவும்.

* குக்கரில் 3 கப் தண்ணீரை ஊற்றி, அது நன்கு கொதிக்கையில்
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.


* சம்பா கோதுமை ரவையைக் களைந்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு நன்கு கலந்து விட்டு பிரஷர் குக்கரை மூடி வேகவிடவும்.

* பொங்கல் வெந்து 2 விசில் விட்ட பிறகு 3 நிமிடங்கள் குறைந்த
தீயில் வைத்து அணைக்கவும்.


* பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து பதமாக வெந்த பொங்கலில் கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

புதன், நவம்பர் 09, 2011

எங்கள் வீட்டு கொலு


சின்னக்குழந்தையாய் இருந்த போது இருந்தே நவராத்திரி வந்து விட்டால் ஒரே கோலாகலம் தான்.  அக்கம் பக்கத்துக்கு வீடுகளுக்கு சென்று பாட்டு பாடி(படுத்தி)  விட்டு  அவர்கள்  தரும்  சுண்டலை  வாங்கிக்கொண்டு  எந்த  பொம்மை  போன வருடம   இருந்தது  எது  புதிது  என்று கணக்கெடுத்துவிட்டு அதை பற்றி பேசிகொண்டே அந்த ஒன்பது நாளும் போய்விடும்.   அதுவும் அம்மா  பாடம் படிக்க சொல்லும்போது அந்த வீட்ல கொலுவுக்கு கூப்ட்டாக இந்த வீட்ல கூப்ட்டாகனு நீட்டி முழக்கி பொழுதை கழித்துவிட்டு வீட்டில் திட்டு வங்கி திரிந்த நாட்கள்.

சற்று பெரியவள் ஆனதும் என் வயதை ஒத்த தோழிகள் எல்லாம் வீட்டில் இருந்த வெளியே  வராமல் பேச முடியாமல் இருக்கும் போது, எங்கள் தம்பிகள் மூலம் என்னைக்கு எந்த வீட்டு  கொலுவுக்கு எத்தனை மணிக்கு போவது என்பது தீர்மானம் ஆகும்.  அது தான் நாங்கள் பேசி  கொள்ள நல்ல சந்தர்ப்பம்.  ஊர் கதை உலக கதை எல்லாம் அந்த பொம்மைகள்  காது கிழியும் வரை பேசி தீர்த்து விட்டு வழக்கம் போல் வீட்டில் போய் திட்டு வாங்கியது ஒரு சுகம்.

பின்னர் இது போன்ற சந்தோசத்திற்காக அம்மாவை நம்ம வீட்டிலும் கொலு வைக்கலாம் என்று நச்சு பண்ணி, அப்பா அதை outright ஆக reject  பண்ணியது எல்லாம் அது ஒரு   கனாக்காலம்.


எனக்கு திருமணம் நிச்சயம் ஆனதும் அம்மா வந்து ஆசையாய்  சொன்னது, " அவங்க வீட்ல தலமுறை தலைமுறைய கொலு வக்கிறது வழக்கமாம்". எனக்கு ஒரே சந்தோசம் தலை கால் புரியல.  ஆனா விதி வலியது ஆச்சே நமக்கு புகுந்த வீடோ மதுரை (பொறந்த வீடும் மதுரை தான்)  ஆனா ரெண்டு பேரும் வேலை நிமித்தம் இருந்தது சென்னைல என்ன பண்ண?  ஒன்னும் பண்ண முடியல.  ஆனா ரெண்டு வருசத்தில ரெண்டு பேரும் மதுரை வந்துட்டோம். 



அதுல இருந்து கொலு வந்தாலே ஒரே கொண்டாட்டம் தான்.  (கொஞ்சம் திண்டாட்டமும் தான், அப்புறம் ஆபீஸ் வேலையும் பாக்கணும்ல, எங்க அம்மா மட்டும் இல்ல இது ரொம்ப பெரிய திண்டாடமோ திண்டாட்டம் தான்).   ஒவ்வொரு வருசமும் இந்த வருஷம் ஒரு அருவி பன்றேன் அது லிங்க அபிஷேகம் செய்யும் அதுக்கு இத வாங்குங்க, இந்த வருஷம் கைலாஷ மலை செய்ய போறேன் (அது  வாங்கிட்டு  வந்த சாமான்  பாத்தாம  குன்று ஆனது தனி கதை) அப்படின்னு ஒரு பெரிய budget  போட்டு  வீட்டுகாரரை  கொள்ளை  அடித்து வரவங்க  போறவங்க எல்லாம் உங்க வீட்டு கொலு சூப்பர் அப்படின்னு  பேர் வாங்கரதுக்குள்ள நான் படர பாடு இருக்கே எங்க அப்பா.



ஆனாலும் அது நிச்சயமா ஒரு மகளிர் திருவிழா தான்.  அங்க அங்க இருக்கிற போட்டோ எல்லாம் சட்சாத் எங்க வீட்டு கொலு போட்டோ தான்.  உங்க அபிப்ராயத்தை பின்னூட்டமா போடுங்க.

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள

வாழைப்பூ
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள்
நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும்
புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி
நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற
அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி
சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.
வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு
சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள்
நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக்
கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும்,
பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப்
போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்
போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத்
தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள்
நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல்
போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக் காய்
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும்.
விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

சுண்டைக்காய்
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய்
சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத்
தூண்டும்.

சுரைக்காய்
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி,
நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக்
கொடுக்கும்.

குடைமிளகாய்
வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக
உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சௌசௌ
கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு
உறுதியைக் கொடுக்கும்.

அவரைக்காய்
புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்
உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்
இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி
நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை
சுத்தப்படுத்தும்.

கத்தரி பிஞ்சு
கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை
தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.


குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.


 
ஒரு இல்லம் இனிய இல்லமா அமையுறது பெற்றோரால்தான்.. அந்த இனிய இல்லத்தை அமைக்க
பெற்றோர் குழந்தைகள் உறவு இனிமையா இருக்குறது முக்கியம்.. பெற்றோர்தான் எனவும்.,
பிள்ளைகள் தான் எனவும் குற்றம் சாட்டிக் கொள்வோம். அந்த உறவு என்றும் நீடிச்சு
இருக்க குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது பற்றி., அவங்க பிரச்சனைகளை களைவது
பற்றி ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற வெப்சைட்டையும் ., ஆர் ஏ புரத்திலும்.,
ராயப்பேட்டையிலும் கிளினிக்கும் நடத்திவரும் டாக்டர் திருமதி வசந்திபாபுவை
சந்தித்து நம் வாசகியருக்காக ஆலோசனை தந்துதவுமாறு கேட்டோம். இவர் மனநல
ஆலோசகராகவும்., ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற கவுன்சிலிங்க் கிளினிக்கையும் நடத்தி
வருகிறார்.. சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பிரச்சனைகள் ., ட்ரான்ஸ்ஜெண்டர்களின்
பிரச்சனைகள்., பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி உள்ளார்.

முதலில் எல்லா வீட்டிலும் ஒரு கூட்டுக் குடும்பமா., தாத்தா பாட்டி அரவணைப்பில்
குழந்தைகள் வளர்ந்தார்கள்.. இப்போ சூழ்நிலை மாறி தனிக் குடித்தனத்தில் வேலைக்குச்
செல்லும் பெற்றோருடன் பிள்ளைகள் இருப்பதால்., தனி ரூம் ., ஏசி., கம்ப்யூட்டர்.,
டிவி., செல்ஃபோன்., கிடைப்பதோடு வேலைக்காரர்கள் அல்லது ஆயாவோடு வளர வேண்டிய
கட்டாயம்.. எனவே பிள்ளைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகுறாங்க..

பிறக்கும் போது அனைத்துக் குழந்தைகளும் ஒண்ணுதான்.. வலிமையானவனா இருக்குறதுக்கோ.,
பலவீனமானவனா மாறுவதற்கோ சூழல்தான் காரணம். சரியா இருக்குறதுக்கும் ., தடம்
புரள்றதுக்கும் பெற்றோர்தான் காரணம்.. அவங்க கவனிப்பு இன்மைதான் காரணம். அதை
விட்டுட்டு நான் என் பிள்ளைக்கு அதை செய்தேன் இதை செய்தேன் என நிறைய வசதிகளை
பட்டியல் இடுவாங்க. இதெல்லாம் விட அவங்களுக்கு தேவை அன்பு..

இதுல இருந்து விடுபடுறதுக்கு குழந்தைகளை ஒரு காரணமா காண்பிக்காம பெற்றோர்தான்
மாறணும்.. குழந்தைகளுக்கு கவுன்சிலிங்க் தேவை இல்லை.. பெற்றோருக்குத்தான்
தேவை..திருமணம் முடிந்ததும் கணவன் மனைவி சம்பாதிக்கிறோம் ., பிள்ளைகளைப் பெற்று
விட்டோம் . அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்துவிட்டோம் .. கார்., பங்களா.,
ஏசி., க்ளாஸ்களில் சேர்த்து விடுவது ஆயா. ட்ரைவர் வைப்பது என இருந்து
விடுகிறார்கள்..

ஆனா குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை பார்க்கணும். சாதாரணமா ஒரு குழந்தை இன்னொரு
குழந்தையிடமிருந்து மாறுபடுது. அது பக்கத்துல இருந்து அதை தட்டிக் கொடுத்து
சாதிக்க வைக்கணும். சாதிச்ச குழந்தைக்கு பரிசு கொடுத்து ஊக்குவிக்கணும். தவறு
செய்தா தண்டிக்காம., கண்டிக்கணும். அன்போடு விசாரித்து அதை திருப்பி பண்ணாத மாதிரி
ஒரு அணுகுமுறையை கொண்டு வரணும்..

முக்கியமா பெற்றோர் குழந்தைகள் முன்னாடி சண்டை போடுதல்., திட்டுதலை தவிர்க்கணும்..
அதைத்தான் குழந்தைகள் எளிதில் கத்துக்குவாங்க..

இனி எஃபெக்டிவ் பேரண்ட்ஸா இருக்க பத்துக் கட்டளைகள்..
BEING EFFECTIVE PARENTS.. AND POSITIVE PARENTS..1. BE A ROLE MODEL..:-முன்னுதாரணமாக இருங்கள்.. வீட்டை நாம் சுத்தமாக வைத்தால்தான் குழந்தைகள் கற்றுக்
கொள்ளும்.இப்படி செய் ., அப்படி செய் என வலியுறுத்துவதைவிட நாமே முன்னுதாரணமாகத்
திகழ வேண்டும்..
2. ALOT TIME FOR CHILDREN. :-குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்.. எவ்வளவு வேலை இருந்தாலும்
குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி கூட இருந்தால் வேண்டாத பிரச்சனைகளை சின்ன வயதிலேயே
கண்டுபிடித்து கிள்ளி எறிய முடியும். அது பெரிதாகி குழந்தை அவமானப் படுவதை ., வேறு
பிரச்சனைகள் உருவாவதைத் தடுக்கும்.
3. LOVE THEM TO TEACH THEM TO LOVE THEM ALL:-நிறைய அன்பு செலுத்துங்கள் . அன்பாக சொல்லுங்கள். மத்தவங்ககிட்டயும்.,
வேலை செய்பவர்கள் கிட்டயும் கூட மரியாதை கொடுத்து பேச பழகச் சொல்லுங்கள் அன்பா .,
மரியாதையா பழகணும்.. எல்லாரும் நமக்கு வேணும் என்பதை குழந்தைகள் உணரணும்.

4. LEAD THEM AND DONT FORCE THEM :-
நம்முடைய ஆசைகளை., எதிர்பார்ப்புக்களை ., ஏமாற்றங்களை குழந்தைகள் கிட்ட
திணிக்காதீர்கள். வழி நடத்துங்கள்.. வற்புறுத்தாதீர்கள்.. கை பிடித்து
அழைத்துச் செல்லுங்கள்.. கழுத்தை பிடித்து தள்ளுவது போல் அதைச் செய்.,
இதை படி என வற்புறுத்தாதீர்கள்.. நீ டாக்டரா வரணும். , எஞ்சினியரா
அல்லது டான்சரா வரணும் என கட்டாயப் படுத்தாதீர்கள். எதில்
அவங்களுக்கு இண்டரஸ்ட் இருக்கோ அதில் ஈடுபடுத்துங்கள். உதாரணமா நீச்சல் கத்துக்க
ஆசைப்பட்டா எவ்வளவு தூரம் இருந்தாலும் நேரம் ஒதுக்கி அழைத்துச் செல்லுங்கள்.

முக்கியமா இந்தக் காலத்துல பெற்றோர் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
ஃபோர்ஸ் செய்வதால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகுறாங்க.. திறமைகளைக்
கண்டுபிடித்து ஊக்குவியுங்கள்.. கோ கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்., ஸ்போர்ட்ஸ்.,
ரீடிங்., ஸ்விம்மிங்., பெயிண்டிங் என அவங்க
ஹாபீஸுக்கும் முக்கியத்துவம் கொடுங்க..

5.DONT COMPARE CHILDREN WITH OTHERS. அது அவங்க செல்ஃப் கான்ஃபிடன்ஸை
குறைத்துவிடும். இப்படி செய்யாம தட்டிக் கொடுத்து ஊக்குவியுங்க..

5. TEACH THEM COPING TECHNIQUES:-
நமது குடும்பம் இப்படி என கற்றுக் கொடுக்க வேண்டும்.. எந்த
சூழ்நிலையிலும் வாழக் கற்றுக் கொடுக்க வேண்டும். யார் வீட்டுக்கு
சென்றாலும் அவர்கள் தருவதை உண்ண., மற்றும் தங்க பழகிக் கொள்ள
வேண்டும்.கட்டிலாக இருந்தாலும் தரையாக இருந்தாலும் செல்லும் இடத்திற்கு தகுந்தது
போல் பிள்ளைகள் தங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும். இது ஸ்கூல் ., காலேஜ் .,
ஹாஸ்டலிலும் இருக்க உதவும். வெறும் பந்தாவுக்காக குடும்ப நிலைமை தெரியாமல்
குழந்தைகளை வளர்க்க வேண்டாம்..
6. LET US STAND IN THEIR SHOES:-குழந்தைகள் ஒரு ஏஜுக்கு வந்த பின் தோழமையோட நடத்துங்க.. அவங்க இடத்துல இருந்து
பாருங்க. சிந்தியுங்க.. அவங்களா மாறுங்க. அவங்க வயதுகுத் தகுந்த மாதிரி நாம மாறி
அவங்க இடத்துல இருந்து நாம அனலைஸ் பண்ணா எது கரெக்ட் எது தப்புன்னுதெரியும்.

குழந்தைகள் பட்டம் மாதிரி. அவர்களை பறக்க விடணும்.. ஆனா கண்ட்ரோல் நம்ம கையில்
இருக்கணும். இழுத்துப் பிடிச்சாலோ ., அதிகமா விட்டாலோ ஒண்ணு பட்டம் அறுந்துடும்
அல்லது பறந்திடும்.. எனவே சுதந்திரம் கொடுப்பதிலும் ., கண்டிப்பதிலும் கூட அளவோடு
இருக்கணும்.
7. TEACH THEM GOOD HABBITS.:-நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கைக் கொள்ளச் செய்யுங்க.. நகம் வெட்டுதல்.,
உடல் பராமரிப்பு., பர்சனல் ஹைஜீன் முக்கியம். ஜங்க் ஃபுட்
வாங்கிக் கொடுக்காதீங்க., அவங்களுக்கு விருப்பமான உணவை விருப்பமான
வடிவத்தில் சுவையா செய்து கொடுங்க. அன்போடு பரிமாறுங்க.. கூடுமானவரை இரவு உணவு
சேர்ந்து சாப்பிடணும். அல்லது சனி ஞாயிறு அன்றாவது ஒன்றாக அமர்ந்து சாப்பிடணும்.
அந்த சமயங்களில் நல்ல விஷயங்களை பேசலாம் ., தெரிந்து கொள்ளலாம்.
8. TEACH THEM TIME MANAGEMENT.:-எந்த சமயத்தில் எந்த வேலையை செய்யணும்னு கத்துக் கொடுக்கணும்.
எக்ஸ்போஷர் அதிகமா உள்ள இடத்தில் டி வி., கம்ப்யூட்டரை வைங்க.. அதுக்கும் இந்த
நேரம் வரைதான் பார்க்கணும்னு நேரம் வைங்க.. தனி பெட்ரூமில் வைக்க வேண்டாம். போன்
ஹாலில் பேசும் இடத்திலேயே வைக்கலாம். செல்போனில் மெசெஜ் அனுப்புவது., பேசுவது
எல்லாம் நேரம் காலம் முக்கியம் என கட்டுப்பாடு வைக்கணும்.
9. UNCONDITIONAL LOVE.:-வரைமுறையில்லாத அன்பு கொடுக்கணும். அன்பை விட நல்ல மருந்து கிடையாது.. எந்தப்
பிரச்சனயிலும் அன்பை விட நல்ல மாற்று கிடையாது. தவறை அன்பா கண்டிங்க.. ஆனா
தண்டிக்காதீங்க.. கூப்பிட்டு பேசுங்க.. சொல்லிக் கொடுங்க.. நல்லது கெட்டது
எல்லாம்.. ஒரு வயதுக்கு மேல நண்பனா இருங்க.. ஆலோசனை சொல்லுங்க.. ஏற்றுக்
கொள்வார்கள்.
10. MAKE YOUR CHILDREN'S FRIENDS AS YOUR FRIENDS :-உங்க குழந்தைகளோட நண்பர்களை உங்கள் நண்பர்களா ஆக்கிக் கொள்ளுங்கள். அவங்க மூலம்
உங்க குழந்தையின் எல்லா மூவ்மெண்ட்ஸும் தெரிஞ்சுக்கலாம். அது ஒரு இம்பார்ட்டண்ட்
சீக்ரெட். நல்ல டாக்டிக்ஸ். கூப்பிட்டு விருந்து வைத்தல்., நல்ல இடங்களுக்கு
நண்பர்களோட அழைத்து போதல் இன்னும் உங்களை பிள்ளைகளுக்கு நெருக்கமா உணரவைக்கும்.
ஒரு குடும்பம் இனிய இல்லமா இருக்க அதன் சாவி நம்ம கையிலதான் இருக்கு. அந்த சாவியைக்
கொண்டு நம்ம இல்லத்தை இனிய இல்லமா மாத்துவோம் !!!

நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்களின் விபரம்‏

நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்களின் விபரம்
அசுவனி
பூமுடித்தல், கெர்ப்பதானம், விவாகம், அன்னபிராசனம், பெயர்சூட்டல்,
உபநயனம், வாகனம் வாங்க, வேதசாஸ்திராபியாசம், புதிய ஆடை, ஆபரணம்
வாங்குதல், அரசு பதவி ஏற்க கிரஹாரம்பம், பொன் ஏர் கட்டல், விதை
விதைத்தல், தென்னை, மா, பலா, முதலிய விருக்ஷங்கள் வைத்தல், யாத்திரை போக,
கிரகப்பிரவேசம், பசுத்தொளுவம் கட்ட,

பரணி
தீர்த்த யாத்திரையில் திதி முதலானவை நடத்த, உட்செடிகள் நாட்ட, கத்தரி விதை விதைக்க,

கிருத்திகை
செடிகள் வெட்ட, கடன் நீக்க, வாகனம் விற்க, குழந்தைகளுக்கு முடியெடுத்தல்.

ரோகினி
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், உபநயனம், கல்வி
கற்றல், கிரகப்பிரவேசம், கும்பாபிஷேகம், நவக்கிரக் சாந்தி, வியாபாரம்,
தானியங்கள் இருப்பு வைக்க, கிணறு வெட்ட, வாசர்கள் நாட்ட, பத்திரிகை
வெளியிட, விருந்துண்ண, ஆலயம் ஆரம்பம்,

மிருகசீரிஷம்
விவாகம், ருது, சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் suசூட்டல்,
முடிவாங்க, காது குத்த, அன்னம் ஊட்டுதல், உபநயனம், கல்வி ஆரம்பித்தல்,
ஆபரணம் அணிதல், மனை அமைத்தல், கிராம பிரவேசம், தேவதா பிரதிஷ்டை, கிரகப்
பிரவேசம்,

திருவாதிரை
சூலைக்கு நெருபிட, சிவபூஜை செய்ய, ஆயுதம், கலை கற்றல்

புனர்பூசம்
பூ முடித்தல், சீமந்தம், பெயர், சூட்டல், முடி வாங்க, விருந்து சாப்பிட,
காது குத்த, உபநயனம், கல்வி கற்றல், பதவியேற்றல், வாஸ்து சாந்தி, கிரகப்
பிரவேசம், யாத்திரை, வியாபாரம், புது துணி வாங்க, திருமணம்,
கும்பாபிஷேகம்.

பூசம்
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், முடி வாங்க,
சாஸ்திரம், கலை கற்க, பசு வாங்க, விவசாயம், யாத்திரை, ஆலோசனை சபை கூட,
பதவிப்பிரமாணம் ஏற்க, வாஸ்து சாந்தி, கரும்பு நாட்ட, விவாகம் நடத்த, குடி
போக, ரத்தின நகைகளை அணிய.

ஆயில்யம்
ஜெபம் பூர்த்தி செய்ய, நவக்கிரக் சாந்தி செய்ய, ஆயுதம் வாங்க

மகம்
விவாகம், மந்திரம் கற்க, சந்நியாசி, தவசிகளை தரிசனம் செய்ய,

பூரம்
ஆயுத பிரயோகம் செய்ய, கிரகப்பார்வை நிவர்த்தி செய்ய, அம்பாள் தரிசனம், செய்ய.

உத்திரம்
கெர்ப்பதானம், பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், முடிவாங்க,
விருந்து சாப்பிட, உபநயனம், விவாகம், சாஸ்திரம் செய்ய, விதை விதைக்க,
கும்பாபிஷேகம் செய்ய, கிணறு வெட்ட, நந்தவனம் வைக்க, அரசு அதிகாரி
பார்க்க, கிரகப்பிரவேசம்.

அஸ்தம்
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், முடிவாங்க,
விருந்து சாப்பிட, உபநயனம், விவாகம், சாஸ்திரம் செய்ய, விதை விதைக்க,
குபாபிஷேகம் செய்ய, கிணறு வெட்ட, நந்தவனம் வைக்க, அரசு அதிகாரி பார்க்க,
கிரகப்பிரவேசம்.

சித்திரை
கெர்ப்பதானம், பூ முடித்தம், பெயர் சூட்டல், முடி வாங்க, கல்வி
ஆரம்பிக்க, உபநயனம், விவாகம், வாகனம் வாங்க, அபிஷேகம் செய்ய, தேவதா
பிரதிஷ்டை செய்ய, கிரகப்பிரவேசம், நிச்சயதார்த்தம், கிணறுவேட்ட, அரசு
அதிகாரியை பாரிக்க, பதவி பிரமாணம்.

சுவாதி
கெர்ப்பதானம், பூ முடித்தல், பெயர் சூட்டல், முடி வாங்க, அன்னம், ஊட்ட,
ஜோதிடம் கற்க, மருந்து சாப்பிட, புத்தகம், பத்திரிகை வெளியிட, நவக்கிரக்
ஜெபம், விவகார துவக்கம், கரம் வியாதிகளுக்கு மருந்து சாப்பிட.

விசாகம்
விவசாய தானியங்களை அறுக்க, கிணறு சீறி செய்ய.

அனுஷம்
ருது சாந்தி, பூ முடித்தல், பெயர் சூட்ட, காது, குத்த, உபநயனம், ஆபரணம்
வாங்க, பதவி பிரமாணம், வாகனமேற, கிரகப்பிரவேசம், வாசற்செய்ய, தூண்நாட்ட,
தேவதாபிரதிஷ்டை.

கேட்டை
நகைகள் அளிக்க, ஆயுத வேலைகள் ஆரம்பிக்க, மந்திரம் செய, ஆட்களை நீக்க,
கடன் நீக்க, ரத்தின கற்களை நன்கு அலச, வாஸ்து சாந்தி செய்ய.

மூலம்
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், விருந்துண்ண, வில் வித்தை கற்க,
ஆபரணம் அணிய விவகாரம், பெயர் சூட்டல், உபநயனம், காது குத்த

பூராடம்
கணக்கு பயில, கரும்பு நாட்ட, பழைய கிணறு சேரி செய்ய, புனித ஸ்நாணம்
செய்ய, புனித திதி செய்ய, பிரயாணம் சென்று வர.

உத்திராடம்
கெர்ப்பதானம், பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், காது குத்த, கிராம
கிரகங்களில் சங்கு ஸ்தாபனம் செய்ய, தேவதா பிரதிஷ்டில் விவாகம்,
கிரகப்பிரவேசம்

திருவோணம்
ருது சாந்தி, பூ முடித்தல், விஷ்ணுபலி, நாமகரணம், அன்னம் ஊட்ட, காது
குத்த, உபநயனம், விஷ்ணு கும்பாபிஷேகம், வீடு, மனை ஆரம்பம் செய்ய, பந்தல்
அமைக்க, ஓம சாந்தி, பொன் ஏர் கட்ட, விதை விதைக்க, விவாகம் நடத்த.

அவிட்டம்
பூ முடித்தல், பெயர் சூட்டல், கல்வி கற்க, இயல், இசை, வித்தையை கற்க.

சதயம்
கெர்ப்பதானம், பூ முடித்தல், பெயர் சுட்டால், முடிவாங்க, அன்னம் ஊட்ட,
உபநயனம், வில் வித்தைக் கற்க, வாகனம், வாங்க, தேவதா பிரதிஷ்டை, வியாபார
கணக்கு முடிக்க, பூமி வாங்க, வீட்டு வாங்க, வீடு வாங்க, தொட்டிலில்
குழந்தை வைக்க, புனித யாத்திரை போக.

பூரட்டாதி
பாம்பு செட் அமைக்க, மந்திரம் ஜெபிக்க, விவகாரம் முடிக்க.

உத்திரட்டாதி
ருது சாந்தி, பூ முடித்தல், சீமந்தம், பெயர் சூட்டல், மரம, செடி, கோடி
வைக்க, கோபுர ஆலய கிரகாரம்பம்; கிணறு புதுபிக்க, விவாகம், குருகுலத்தில்
கல்வி பயில,

ரேவதி
ருத் சாந்தி, பூ முடித்தல், பெயர் சூட்டல், முடிவாங்க, காது குத்த,
அன்னம் ஊட்ட, உபநயனம், விவாகம், வேதம் கற்க, புத்தாடை அணிதல், அணிகலன்களை
அணிய விதை விதைக்க, வெளியூர் புறப்பட, கும்பாபிஷேகம் செய்ய, கடல் கடந்து
செல்ல.

இது ஒரு ஈமெயில் சரக்கு சொந்த சரக்கு அல்ல!!